Friday, December 4, 2009

Thiruvalangadu kovil tharisanam.wmv

Our Chennai Ainuruvars recent visit to Thiruvalangadu

Monday, November 9, 2009

Divyas marriage video

Sunday, October 4, 2009

பாலகாடு விற்றுனியர் கோவில் வரலாறு

அன்புடையீர்
வணக்கம். நம்மவர்களின் குல தெய்வமான பாலகாடு விற்றுனியர் கோவில் வரலாறு பற்றி எனது தந்தையார் எழுதிய புத்தகத்தை இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இத்தருணத்தில் உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன் .இப்புதகத்தினப் படிக்க கீழ்க் கண்ட லிங்க்கினை கிளிக் செய்யவும் .
http://sites.google.com/site/modernsiva/palakkadu-temple-history
சிவப்பிரகாசம்

Monday, September 28, 2009

நமசிவாயம் வாழ்க

நமசிவாயம் வாழ்க என்றபுத்தகத்தினைப் படிக்க கீழ்க்கண்ட லிங்க்கினை கிளிக் செய்யவும்
http://sites.google.com/site/modernsiva/namasivayam--vaalka

Friday, September 4, 2009

திருவாசகச் செல்வர்






காலம் சென்ற எங்கள் தந்தை கடந்த ௨000 ஆண்டு நமச்சிவாயம் வாழ்க என்ற நூலினை எழுதினார் .இந்நூல் இலவசமாக வெளியிடப்பட்டது . அனைத்து சிவன் கோவில் களிலும் தரப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை திருக்காரநீஸ்வரர் கோவிலிலும் விநியோகம் செய்யப்பட்டது . இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டம் ஒவ்வொறு துறையிலும் சிறந்த தொண்டினை செய்தவர்களுக்கு அத்தொண்டினைப் பாராட்டி விருது வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . அவ்வகையிலே 2001 ஆம் ஆண்டு ஆன்மீகத்தில் சிறந்து பணியாற்றியதற்கு திருவாசகச் செல்வர் என்ற விருதினை கொடுத்து சிறப்பு செய்தனர். அவ்விழாவின் புகைப்படங்களை மேலே காணலாம் .

இந்த நூலினை அனைவரின் பார்வைக்கும் சமர்ப்பிக்கிறோம் .கீழ்க்கண்ட லிங்கினை டைப் செய்தால் புத்தகத்தினை படிக்கலாம் .இப்புதகத்திணப் படிக்க adobe acrobat reader இருக்க வேண்டும். இல்லையேல் www.adobe.com இணைய தளம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
http://docs.google.com/?tab=3o#owned-by-me

Monday, August 31, 2009

உத்ரகிரியைப் பத்திரிக்கை

சிவ மயம்
உத்ரகிரியைப் பத்திரிக்கை

தோற்றம் :19.07.1934
மறை வு :28.08.09














அன்புடையீர்,
எங்களது தகப்பனார்திருவாசககச்செல்வர் சென்னைK.A. சீனிவாசன் (தாம்பரம் சானடோரியம்)
ஆவணி மாதம் 12 ம் தேதி வெள்ளிக்கிழமை (28.08.09)அன்று காலை 8.00 மணியளவில்
சிவலோகபதவி அடைந்தார்.அன்னாரது உத்ரகிரியைஆவணி மாதம் 22 ம் நாள் 07.09.2009
திங்கள்கிழமை காலை 7.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டைகாரனீஸ்வர ர்கோவில்

குளக்கரையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
தாம்பரம் சானடோரியம்
31.08.2009 K.S. முருகேசன்
K.S.சிவப்பிரகாசம்
மதுமதி ரத்தினசபாபதி













Sunday, August 9, 2009

அன்புத்தந்தைக்கு விழா







எங்கள் அன்புத் தந்தைக்கு 75 வயது பூர்த்தி ஆனதை முன்னிட்டும் எங்கள் அன்பு பெற்றோர்களின் 50 வது திருமண ஆண்டினை முன்னிட்டும் எங்களது இல்லத்தில் நடைபெற்ற சிறு விழாவின் காட்சிகள் சில.



Wednesday, May 6, 2009

கானல் காட்சி!





கத்திரி வெயில்
மண்டையைப் பிளக்க
கட்டிப்பிடித்து
கடலில் குளிக்க
கை கொடுத்து
காவலன் உதவிக்குவர
கன்னியவள் களிப்பையும்
கற்றுக்குட்டிகளின்
சிரிப்பையும் கண்டு
மகிழுங்களேன் ! !

Saturday, April 25, 2009

அமரன் சிரிப்பே சிரிப்பு !

" அமரன் சிரிப்பே சிரிப்பு " [ 9-5-1982 ]

மலர்கின்ற மலரெல்லாம் மலரேயல்ல
மங்கையவள் பெற்றதுதான் மலரேயாகும்
புலர்கின்ற பொழுதெல்லாம் பொழுதேயல்ல
பூவையவள் கண்டதுதான் பொழுதேயாகும்
வீசிவரும் காற்றெல்லாம் காற்றேயல்ல
கைவீசிவரும் பிள்ளைபட்ட காற்றேகாற்று
பூசுகின்ற அத்தர்மணம் மணமேயல்ல
புகழ்பெற்ற பிள்ளைமேனி ம்ணமேயாகும்
இசைக்கின்ற இசையனைத்தும் இசையேயல்ல
இவள்பிள்ளை இசைப்பதுதான் இசையேயாகும்
பேசுகின்ற பேச்சனைத்தும் பேச்சேயல்ல
பேரனவன் மழலைமட்டும் பேச்சேயாகும்
மயக்குகின்ற மதுவனைத்தும் மதுவேயல்ல
" மது " பிள்ளை தேன்வாய்நீர் மதுவேயாகும்
அயலார்கள் சிரிப்பதெல்லாம் சிரிப்பேயல்ல
அமரன்வாய் சிரிப்பதுதான் சிரிப்பேயாகும் ! !

Thursday, April 23, 2009

இராமலிங்கம் ! [ 6-5-1982 ]

சேரன் மகளைச் சோழன் மணந்தான்-அந்த
சோழனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான்
வாழவநத திருமகனோ வாய்நிறை சிரிப்பைக் கொண்டான்
தாழவந்த பருந்தின் வேகம் தவழ்வதிலே தானும் கண்டான்
கொட்டிவிட்ட தேளின் வேகம் கொண்டே நகரக்கண்டான்
எட்டிவிட்ட பொருளனைத்தும் எடுத்தெறிந்து உடையக்கண்டான்
தட்டித்தான் கேட்பதற்கு தனக்குநிகர் யார்தான் என்றான்
வெட்டிப்பேச்சு எதற்கு வேகமுள்ள பேரன் என்றேன்
நல்ல அழுகைமூலம் நாபிதன் தேவை சொல்வான்
கள்ள அழுகை காட்டி கனிவுடனே எடுக்கச்செய்வான்
பொல்லா தாமதத்தை பொறுப்பாக்கிப் பாலை மறுப்பான்
மல்லுக்கு நின்றாலும் வாய்வைத்து உறுஞ்சமாட்டான்
பேருக்கு புகழுக்குப் பேரன்தான் பிறந்துவிட்டான்
பேறுபெற்ற பாட்டனின் பெயரையே தானும்கொண்டான்
ஊருக்கு உலகத்துக்கு உயர்வோன்தான் வந்துவிட்டான்
பேரதனைச் சொல்லுகிறேன் பேரன்பெயர்" இராமலிங்கம் "
கணநாதன் அருளாலே களிப்பான வாழ்வு பெறுவான்
குணவதியாம் கலைமகளின் கனிவாலே கல்விபெறுவான்
தனமகளின் பார்வையினை தவறாதுதான் பெறுவான்
எனதான வேல்முருகன் எப்போதும் துணையிருப்பான் ! ![

Wednesday, April 8, 2009

மனிதனா ? கால்நடையா?

ஐந்தாண்டுக் கொருமுறை தேர்தல் வரும்
அனைவருமே என்னை வணங்குவார்கள்
பந்தியில் முதலிடம் எனக்கு அளித்து
பக்குவமாய் ப்ரியாணி பாயசவடை
வந்தித்து என்னை உண்ணவைத்து
வாருங்கள் வாக்குச் சாவடிக் கென்பார்
சொந்தக்கார் போல சொகுசாக போனநான்
சொன்னபடி வாக்களித்து வெளியே வந்தேன்
எந்தக்காரும் எனக்குக் காத்திருக்கவில்லை
என்னிடம் வாக்களித்தவர் ஆளேகாணோம்
சுந்தரமாய் காரில் போனவன் நான்
சூழ்ச்சியில் ' கால்நடையாய் 'திரும்பிவந்தேன் ! !

Friday, April 3, 2009

கடனை அடை !

ஐந்தாண்டு ஆட்டிப் படைக்கும் உரிமை
அனுபவிக்க முடிவு எடுக்கும் கூட்டம்
சந்தை வியாபாரத்தில் அடித்து வாங்க
சர்வ கட்சியிலும் சகல கலா வல்லவர்கள்
எந்தப் பகுதியை யார் ஆளுவது அது
சொந்த சொத்துக்களைப் பொறுத்ததாம்
க்ந்து வட்டியில் காத்திருக்கும் மன்னர்களே
இந்த முறை முழுவதுமாய்த் தீரட்டும் ! !

பார்த்த ஞாபகம் !

பார்த்த ஞாபகம் !

கனத்த உருவம் கசங்காத சட்டை
கரில் வந்து இறங்கியவரை
கைகுலுக்கி சிலர் வ்ரவேற்க
கத்திருந்த மக்களுக்கு எங்கோ
எப்போதோ பார்த்த ஞாபகம்
காத்தமுத்து பேரன் சொன்னான்
இவர் தானய்யா நம்ம எம்.பி
இந்த முறையும் தான் நிற்பதை
சொல்ல வ்ந்திருகிரார் என்றான்
இப்போது நினைவு வருகிறதென்றனர் ! !

முடிந்தால் சிரிக்க !



தேர்தல்ல சீட்டுக்கு அப்பா
ஏன் இப்படி அலையரார்?

இல்லைன்னா நாளைக்கு
உங்க காலேஜ் சீட்டுக்கு
இதைவிட அலையணுமே...!


மறப்போம் மன்னிப்போம்
என்றால் என்ன ?

தேர்தல் காலத்தில் திட்டித்
தீர்த்தவர்கள் கூட்டணி
ஆட்சியில் கூடி குலாவுவதாம்..!


நம்ம கோவிந்தசாமியை
அழைத்து வந்தது தப்பா
போச்சு...

ஏன்...என்னாச்சு ?

வேட்பு மனு தாக்கல் செய்து
வெளியே வந்தபோது
கோவிந்தா...கோவிந்தா....
என்று ஒரே சத்தம் !


நல்ல வேளை வக்கீல்கள்
பணிக்குத் திரும்பி விட்டனர்..!

உன் வழக்குத்தான் ஏதுமில்லையே..?

இல்லப்பா...முக்கிய தேர்தல்
வேலைக்கு நம் ஆட்களை
வெளியே கொண்டு வரணும்
அதான்....!

வேட்புமனு தாக்கலின் போதே
வெற்றிமாலை சூட்டியதாகச்
சொல்கிறார்களே...!

அட....நீங்க ஒண்ணு வெற்றிவேல்
போட்ட மாலையைச் சொல்றாருங்க ..!


சுற்றிப்பார்க்க வந்தவர் ஏன்
கிறு கிறுத்து விழுந்துவிட்டாராம் ?

அவர் தன்னைத் தானே சுற்றிக்
கொண்டு பார்த்தாராம்...!


முழுதும் தேடியும் ஒரு ஜோக்
தானே இருக்குது..?

இந்த புத்தகத்தில் ஒரே ஜோக்
என்று தானே நானும் சொன்னேன் !

Monday, March 23, 2009

வாழ்த்துகிறேன் !

முத்துக் குமரனின் முத்தான " ஆரோக்கியம் "நூல்

முழுவதுமாய்ப் பார்த்தேன் படித்தேன் சுவைத்தேன்

சத்தான கருத்துக்களை சலிக்காது பல கூறி

சாத்துக் கவிதைக்கான சாதனை படைத்துள்ளார்

சத்தியத்தையே சார்ந்திரு ' சரி, கம, பத, நீ, பாடிடு '

சாயுச்யத்தைக் கூறும் அழகை மிக ரசித்தேன்

நித்தமும் பெற்றோரை மற்றோரை வணக்கும்முறை நான்

நீண்டகாலமாகச் செய்கிறேன் !நிறைவாகப் பாராட்டுகிறேன்!

Saturday, March 21, 2009

ஆத்ம திருப்தி !



எல்லோரையும் திருப்திபடுத்த
எவராலும் முடியாது
எவருடைய எதிர்பார்ப்புக்கும
எதைப் பலியிட்டுமாகாது

பிறர் வாழ்வைத் திருத்துவதை
விட்டுவிடு
உன் வாழ்வை நீ வாழ
முயற்சி எடு

விதைக்கும் விதையாய்
நீ இருந்தால்
வீசும் மணம் அதில்
இருக்காது

மலர்ந்த மலராய்
நீ இருந்தால்
மகரந்த தேனும் அதில்
இருக்கும்

அன்பால் வாழ்வை
மலரச் செய்வாய்
ஆத்ம திருப்தியில்
நீ வாழ்வாய் ! !

Sunday, March 15, 2009

PRIYA DANCE 0001

Monday, March 2, 2009

கடமையை செய் பலனைப் பாராதே !


விருது வேண்டுமென்று

நடிப்பவற்கும் துடிப்பவர்க்கும்

விருது கிடைப்பதில்லை

எல்லாப் புகழும் தனக்கே

என்பவர்க்கு எதுவும் வருவதில்லை

இறைவனுக்கே புகழ் எல்லாம்

என்பவர்க்கு இரண்டு

ஆஸ்கார் விருதுகள் !

பாட்டை நீ பாடு

பலனை இறைவனிடம் விடு

கீதை சொல்வது

இதுவாக இருக்குமோ ? !



பசிக்கு உறவு !

ஊரில் திருமணம் மாரில் சந்தணம்
உள்ளே நுழைந்தவனை யாரென்றார்கள்
இல்லாத அழைப்புக்கு இவன் விருந்தாளி
சொல்லவா முடியும் தோன்றிய கணத்தில்
கல்லூரி நண்பன் மாப்பிள்ளை என்றான்
கழிசடை எல்லாம் காத்திரு என்றனர் ஏனாம்?
இவனுக்கு நடப்பது இறுபத்தியாறு
மாப்பிள்ளைக்கு நடப்பது " அறுபது கல்யாணம் "

Friday, February 27, 2009

உதவும் கரங்கள் !

எல்லா மருத்துவ மனைகளையும்

இழுத்து மூடுங்கள்

வேலை வாய்ப்பு அலுவகங்களுக்கு

பூட்டுப் போடுங்கள்

அமத்தா பகவான் அப்பச்சி பகவான்

நில்லாமல் வாருங்கள்

நினைப்பதற்கு மேல் பலமடங்கு

கைமேல் பலன் காண

சந்தேகம் இருப்பவர்கள் எங்களை

சந்தித்தவர்களை கேட்கலாம் ! !

Thursday, February 26, 2009

காதல் கலக்கல் !

குடை பறக்க கோழி பறக்க
குப்பைக்குள்ளே குமரி பறக்க
குறுந்தாடி வேந்தன் மனம் பறக்க
குதூகலிக்கும் தென்னை மரங்கள் !




ரோஜாவின் கள்ளம் !



உள்ளம் கவர்ந்த ரோஜாச் செடி
மஞ்சள் ரோஜாவைப் பறிக்கும் விரல்
முள்ளைக் குத்திக் கொண்டது அதனால்
கிள்ளிப் பறித்த பூவின் நிறம்
மஞ்சள் பாதி சிவப்பு பாதியுமாய்
கள்ளச் சிரிப்பு சிரிக்கின்றது ! !

முடிந்தால் சிரிக்க !

மகனுக்கு அறிவுமதின்னு பேர்வைச்சது
தப்பாப் போச்சு ...
ஏன்.... சலிச்சுக்கிறீங்க ?
அட .. பின்னே என்னங்க தினசரி யாராவது
வீட்டுக்கு வந்து ' அறிவு ' இருக்குதான்னு
கேட்டிட்டுப் போறாங்க ...! !

எரிவாயு எரிக்கிறது ! !



அஞ்சல் அட்டை வாங்க அரைமணி
பார்சல் அனுப்ப பலமணி நேரம்
பதிவுத் தபால் எழுத்தர் விடுப்பு
பக்கத்து இருக்கை அவருக்குப் பகை
படுத்தி எடுத்த அஞ்சல் துறை இன்று
பலசரக்கும் பயணச்சீட்டும் விற்கிறது
ஐம்பது காசுக்குப் பேசு தொலைபேசி
அறைகூவிக் கூட்டம் சேர்க்கிறது
ஒரு நாள் எரிவாயு ' தெருவினில் கூவும் '
மறுநாள் வா...என நாம் சொல்லப்போகிறோம் ! !

Tuesday, February 24, 2009

இரண்டடி உயர இசை மேதை !



இயற்கையின் படைப்பில் விதிவிலக்காவார்
இருகால் கைகள் இவருக்கில்லை
வயது நாற்பத்தி ஐந்தானாலும்
வளர்ந்தது இரண்டடி மட்டுமேயாகும்
கர்னாடக சங்கீதக் கச்சேரி செய்வார்
கனிவாகப் பல மொழி பேசி எழுதுவார்
இடது கன்னம் தோள் இடையில்பென்சில்
இவர் வைத்து எழுதும் அழகே தனிதான்
குடியரசு தலைவர் முன் கச்சேரி செய்தார்
" குறையொன்றுமில்லை "பாடலைப் பாடினார் !

Tuesday, February 17, 2009

எது ஆன்மீகம் ?

கோயிலுக்கு விளக்கேற்ற
கொண்டு செல்லும் எண்ணை
மீதமிருந்தால் வீட்டுக்கு
எடுத்து வரலமா ?

வரலாம்

வெள்ளிக்கிழமை வீட்டில்
அம்பிகைக்கு விளக்கேற்றலாமா ?

ஏற்றலாம்.

பல் விளக்கினால் பச்சைத் தண்ணியில்
வாய் கொப்பளிக்கலாமா ?
பஜனையில் பாடத்தெரியாதவர்
பாடலாமா ?
ஆடிவெள்ளி அம்பாசமுத்திரத்தில்
குளிக்கலாமா ?

வர வர பொது அறிவே
போய்விட்டது போங்கள் ! !



குழந்தைத் தொழில் !


குழந்தை கையில் பனங்காயாம்

குறுகுறுப்பான பார்வை எங்கே ?

பள்ளிச் சீருடை சிறுமி கண்டு

பரிதாபத்தில் அவன் முகமாம்

பேசும் பொற் சித்திரம்

பேசாத ஊமையாய்

காசுக்கு வேலை செய்து

கடன் கழிக்கும் அவலமிது ! !

மைக் டெஸ்டிங்க் !


பந்தல் அலங்காரம் பதாகை தோரணம்
பந்தாவாக எல்லாம் தயார் நிலை
கூட்டம் ஆரம்பிக்க தாமதம் ஆயிற்று
அமைதி காக்க அறிவிக்கச் சென்றவன்
'மைக்டெஸ்டிங்க்' என்று சொல்லாமல்
" ஒன்...ட்டூ...த்ரீ...யென்று சொன்னவுடன்
எப்போது என்று காத்திருந்த மக்கள்
எல்லோரும் எழுந்து ஓடிவிட்டனர்! !

Sunday, February 15, 2009

ஆனந்தம் உன் இயல்பு ! !


ஆனந்தம் உன் இயல்பு ! !
ஆனந்தம் என்பது கடைச் சரக்கல்ல

அது உன் உள்ளத்து உணர்வே ஆகும்

ஏனந்த இயல்பை மறந்து மறந்து விட்டாய் ?

எதிர்மறை விளைவால் ஏங்குகிறாய்

தீதும் நன்றும் பிறர் தருவதல்ல

தீமையும் நன்மையும் உன் படைப்பாகும்

சூதும் வாதும் வேதனை செய்யும்

சூழ்நிலை மாறத் துணை உன் உழைப்பு

உண்மை பேசு உழைப்பை நாடு

உள்ளத்துக் கள்ளம் உதறித்தள்ளு

Friday, February 13, 2009

படியில் பயணம் மடியில் மரணம் ! !

பேருந்தில் தொங்கிப் போவது

பெரியதோர் சாதனைதான்

கால் பாத இடம் கைவிரலின் பிடி

காற்றின் வேகத்துக்குப் பறக்க வேண்டும்

ப்றப்பவர் மனம் கிக்....கிக்...கிக்

பார்ப்பவர் நெஞ்சு திக்...திக்...திக்

பெற்றோர் உள்ளம் பக்...பக்...பக்

பெற்றத்தின் சிரிப்பு எக்...எக்...எக் ! !

கப்பலின் வரிசை கண்கொள்ளாக் காட்சி ! !


பாய்மரக் கப்பலின் அணிவகுப்பு

பார்க்க வருவோர்க்கு பெரும் வியப்பு

மாய வித்தையென ஜொலி ஜொலிப்பு

மயக்கும் வண்ணங்களில் ஒளியமைப்பு !


குறுக்கு வழியில் இலக்கை அடைய

க்ற்றுக்கொடுப்பது பள்ளியிலா ?

குற்றம் என்று தெரிந்தே போவது

கூற்றுவன் வழியெனத் தெரியாதா?

இருப்புப்பாதை கடப்பது ஆபத்து

இரயில் வரும்போது இரட்டிப்பாகும்

மறுமை நோக்கிப் பயணம் எதற்கு

மாற்று வ்ழியை யோசித்துப் பாரு!!

Tuesday, February 10, 2009

உவகையின் உச்சம்

நீலநிற நீர் நிலையில்

நீந்துகிற மனித மீன்கள்

ஆலமென நீர்ச்சிதறல்

அதில் நனைய வரும் கூட்டம்

ஏலத்தில் வந்த மகிழ்ச்சி

எடுத்தவர் அடிக்கும் " பல்டி "

கோலத்தைக் கண்டு ரசிக்க

கோடிகண் வேண்டுமம்மா ! !
தெருச்சண்டை

கொடியோடும் தடியோடும்

வந்தவர்கள் கொள்வது

தெருச்சண்டை யாரென்றால்

சட்டத்தில் பட்டம் பெற்றவர்களும்

சத்தியாக்கிரகத்தின் வாரிசுகளுமாம் ! !

Monday, February 9, 2009

போட்டால் சத்தம் பெரிதாகும்


குடிக்காதே குடிக்காதே போராட்டம்

குடிப்பது உடல் நலக் கேடாகும்

போராட்டம் நடத்துகிற மகளிரணி

போட்டால்தான் சத்தம் பெரிதாகும்

பேரொலியில் கோரியது அமுலாக்கம்

பேசவே முடியாத தொண்டைக் கட்டு

உடைக்க எடுத்த பாட்டிலை " உள்ளே "

போட்டு உடைத்தால் தப்பென்ன ?

Sunday, February 8, 2009

தெப்பத் தேர் !


வண்ண வண்ணத் தண்ணீரை
வந்து பாருங்க வண்டியூர்
மாரியம்மன் தெப்பக்குளம்
வண்ண ஜாலம்
செயயுதுங்க
எண்ணமெல்லாம் இறைத்தன்மை
நிலைக்கச செய்யுங்க
எப்போதும் வாழ்வில் ஒளி
எய்து மகிழுங்க ! !

படியளக்கிறான் சொக்கன் (மதுரை படியளக்கும் திருவிழா)

விலைவாசி உயர்வு விண்ணைத் தொட்டது


கச்சா எண்ணையே கருவியாயானது


மலைபோல் விளைந்த பொருள்களெல்லாம்


மாயமாய் மறைந்து எங்கு போனது?


தலைக்கு தலை விலையை ஏற்றி


தவிடெல்லாம் தங்கத்தின் மதிப்பானது


நிலை குலைந்த மனிதனுக்குப் படியளந்து


நிம்மதியைத் தருகின்றான் சொக்கன் இன்று.




அரசியல்


ஓட்டு இலவசம் 1
உடை இல வசம் வீ ட்டு மனை இலவசம்

நிலப்பட்டா இலவசம் இடுபொருளுமிலவசம்


அரிசி கிலோ இரண்டு ரூபாய்


மளிகைப் பொருள் மலிவு விலை

ஆக்குவதற்கு அடுப்பு இலவசம்

வெளிச்சத்துக்கு மின்விளக்கு இலவசம்

பார்த்து பகுத்தறிவை வள்ர்க்க

வண்ணத் தொலைக்காட்சி இலவசம்

குடும்பம் மலர திருமணம் இலவசம்

கூடுதலாகக் கேட்பதும் இலவசம்

இத்தனை இலவசம் வாங்குபவர்

ஓட்டை இலவசமாய்
போட்டால் என்ன ?!

Friday, February 6, 2009

திருவாதிரை சீர் மற்றும் பொங்கல் சீர்






































  1. கும்பகோணம் திருவாளர்கள் SKRS.முத்துக்குமரன்,SKRC.ரத்தினசபாபதி,சந்திரசேகரன் குடும்பத்தினர எர்ணாகுளம் திருவாளர்கள் ARCR.பொன்னம்பலம்,சீனுவாசன் குடும்பத்தினர்க்கு . திருவாதிரை சீர் மற்றும் பொங்கல் சீர் வழங்கும் நிகழ்ச்சிகள் கடந்த ஜனவரி பத்து மற்றும் பதினான்காம் தேதியில் நடைபெறறன . சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
சரி என்பதே ...சரி
வேண்டாதவர் செய்தால் வெறுப்பு
வேண்டியவர் செய்தால் உவப்பு
மறறவர் பேசினால் அறுவை
நீங்கள் பேசும்போது அறிவுரை
நீங்கள் ஏற்பது எதுவானாலும்
அது சொர்கமாகிவிடும்
நீங்கள் எற்கமறுக்கின்ற்போது
அதுவே நரகமாகிவிடும்!
நல்லவர்களுக்கு நாளெல்லாம் இனிப்பு
அல்லாதவர்களுக்கு நாளும் க்சப்பு
எல்லாமே இருப்பது உங்கள்கையில்
உங்கள் தேர்வு இனிப்பா ?கசப்பா ?

Tuesday, February 3, 2009

அறுவை !

பிரதமர் அறுவை சிகிச்சை முடிந்து

வீட்டிற்கு வந்து விட்டாராமே ?

அவர் இதைப்போல் எத்தனை

" அறுவை"களைப் பார்த்திருக்கிறார் !!

யாதும் ஊரே யாவரும் கேளிர்

அலுவலக நண்பர் இனிப்பு வழங்கினார்
ஆசையுடன் எடுத்துகொணட இவர்
அமெரிக்காவுக்குப் பாடுபட வீட்டில்
ஆண்பிள்ளை பிறந்திருக்கிரானாமே
கைகுலுக்கி " கங்கிராட்ஸ்" என்றார்
வாழ்கையின் லட்சியம் வழிதவறவில்லை !!

எல்லோரும் இந்நாட்டு முதல்வர்கள்

நடித்தது பிடித்தது என்றால்
நாலுமுறை படம் பார்த்து ரசி
நல்லவனாக வருகிறார் என்றால்
அந்த கதாபாத்திரம் அப்படி
நடிகருக்கு ரசிகர் மன்றம் சரி
நாட்டையே தருவதென்றால் எப்படி
நாடாளுமன்றம் ரசிகர் மன்றமானால்
நல்லதான்னு கொஞ்சம் செப்பண்டி!!

பழமையும் புதுமையும்

பழமையின் பழக்கம் எதுவென்றாலும்

பயத்தில் ஏற்பது அழகல்ல அதன்

பொருளை நன்றாய்ப் புரிந்துக்கொண்டு

போற்றவும் அகற்றவும் செய்துவிடு

அறிவியல் முன்னேற்றம் அடையா நாளில்

ஆளைதொட்டால் தீட்டு என்றார்

நெறிமுறை வாழ்வில் தவறிவிட்டு

நேர்த்திக்கடனதான் வழி என்றார் !
அன்றைய சூழல் அன்றைய வாழ்வு
அதில் ஒருபடி மேலுள்ளது இன்று
சென்றைய நாளை தொங்கிக்கொண்டு
சேற்றில் நடப்பது என்ன பயன்
பழமையைப் புரிந்து கொள்
புதுமையை ஏற்றுக் கொள்
பாமரத் தன்மைக்கு விடை கொடு
பட்டறிவின்படி முடிவெடு !!

Sunday, February 1, 2009

ஆக்ரமிப்பு

ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன
அறிக்கையும் அனுப்பப்பட்டது
அடுத்து யாருக்கு எந்த இடம்?
அரசியல் தலைவரைக்
கேட்டால்தான் தெரியும்!!

பெருசு கொஞ்சம் நகரு 1

விதை பிளக்கிறது முளை வருகிறது
முளை வளர்கிறது செடி உயர்கிறது
செடி பூக்கிறது பூ காய்க்கிறது
காய் கனிகிறது கனி விழுகிறது
கனியின் விதையில் காலம் சுழல்கிறது
மனிதனின் இயற்கை சக்கரமும் இதுதான்
ஆனால் பழுத்த மனிதனுக்குப் பட்டம் "பெருசு"
பழுத்தோலை பார்த்து குருத்தோலை சிரிக்கிறது!!

Saturday, January 31, 2009

முடிச்சை அவ்ழ்க்காதே

ஊருக்குப் புறப்பட்டாச்சு
உதவிக்குப் பையன் வந்தான்
பத்து மூட்டைகளைக் கட்டி
பதவிசாய் முடித்து விட்டான்
பக்கத்து வீட்டார் சொன்னார்
பையன் நன்றாக முடிப்பதை
முடிச்சுப் போடுவது தப்பில்லை
அவிழ்ப்பதுதான் என்றேன் ! !

Thursday, January 29, 2009

திருமணப் பரிசு

எங்கே திருமணம் என்றாலும்

எப்போது இவள் போனாலும்

தப்பாது சின்ன கடிகாரம்

தகுதிக் கேற்ப இவள் கொடுப்பாள்

இங்கும் வரவேற்பு நடந்தது

இவளுக்கும் தோழியர் பரிசளித்தனர்

இருபது முப்பது கடிகாரங்கள்

இன்னும் பிரிக்க சில உள்ளன

ஏனென்று நாம் நினைக்கும்போது

நீ எதைக் கொடுத்தாய்

அதைப் பெறுவாய்

என்பது இதுவாக இருக்குமோ ?!

நன்கொடை

நல்ல நிகழ்ச்சிக்கு நன்கொடையாம்

பத்தாயிரம் அளிக்க அவன் நினைத்தான்

பத்திரிக்கை வர நாளாயிற்று

பாதி கொடுத்தால் போதுமேன்றான்

இரவும் பகலுமாய் இரண்டுநாளில் அது

இரண்டாயிரம் என்றான் மனைவி மூலம்

வருவதாக தொலைபேசியில் சொன்னார்கள்

இருப்பதைக் கொடுப்போம் வரட்டும் என்றான்

வந்தவர்களை எப்படி சும்மா அனுப்புவது

வந்த செலவுக்கு நூறு முடிவானது

Wednesday, January 28, 2009

வானத்தின் எல்லை

எல்லை இல்லா இறைவனுக்கு
எங்கு ஆரத்தி காட்டுவது ?
அல்லது வடிவம் கொடுத்தால் அங்கு
எல்லை மீண்டும் வருகிறது
எல்லாம் அவனே என்னும்போது
எதுவும் நமக்குப் புரிவதில்லை
தொல்லை துயரம் வந்தால் மட்டும்
தொழுதே வானத்தை நோக்குகிறோம் !


Tuesday, January 27, 2009

அன்பு மழை !

சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கிறது

சிலரைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லை

ஏன்? என்றாவது சிந்தித்ததுண்டா ?

உங்கள் அலைவரிசைக்கு அவர்கள் இல்லை

அவர்களை அனுசரிக்கும் நிலை உங்களுக்கில்லை

மழை நீரின் தூய்மை அதுவிழும் இடதைச்சாரும்

மனதில் அன்பு பொழியுமானால்

அது விழுமிடமெல்லாம் thooimai yaakum !

எதைச் செயதால எதைப் பெறுவாய் ?

அன்பு செலுத்த வில்லை

ஆதரவு காட்ட வில்லை

அடைக்கலம் கொடுக்க வில்லை

ஆபத்துக்கு உதவ வில்லை

துன்பம் துடைக்க வில்லை

துயரில் பங்கேற்க வில்லை

எல்லா இல்லையும் சரிதான்

தொல்லை இதில் என்னவென்றால்

எதுவுமே செய்யாத உனக்கு மட்டும்

எல்லாமே வேண்டுமென்றால் எப்படி ?!

நிம்மதி

நிம்மதி என்பது எங்கிருக்கு உன்
நினைவில் செயலில் தானிருக்கு
மற்றவர் தேவைக் குதவும் போது
மனதில் தோன்றும் நிம்மதி
பெற்றவள் சிரிப்பைக் காணும்போது
பெருகும் அங்கே நிம்மதி
உற்றவள் பிடித்ததை வாங்கும் போது
உனக்கும் அவளுக்கும் நிம்மதி
குற்றம் குறைகளைத் தள்ளும்போது
கூடும் வாழ்வில் நிம்மதி !!

திருந்துங்கள்

நல்லதை நினையுங்கள்
நினைத்ததைச் செய்யுங்கள்
செய்வதை முடியுங்கள்
முடிந்ததை த திருத்துங்கள்
திருத்தத்தில் திறுந்துங்கள்!

சக்தி பெறு சக்தி கொடு !

அனலும் புனலும் காறறிலுமே
அடங்கிக் கிடக்கும் சக்தியினை
அஷ்டாவதானம் செய்தாவது
ஆர்வமாய் மனிதன் திரட்டுகிறான்
அதற்குப் பெயரே " மின்சக்தி "
அது வந்தாலே இருள் விலகும்
இறை சக்தியை இறஞசிபெறு
இவ்வுலகம் அதனால் உயவடையும் !

Tuesday, January 20, 2009

ஏன மறுக்கிறாய்

ஏன மறுக்கிறாய்?

பரிசும் விருதும் பாராட்டும்

பார்ப்பவர்க் கெல்லாம் கொடுப்பதில்லை

உரிய தகுதி உடையவர்க்கே

உழைக்கும் கூலி கிடைக்கிறது

மற்றவரைப் பாராட்ட மறுப்பவர்கள்

மனதில் கள்ளம் குடியிருக்கும்

எறறைக்கும் மனதைத் துய்மை யாக்கு

எழில்மிகு வாழ்க்கை வரும் உனக்கு

என்னத்த சாப்பிட்டு என்ன ?

இனிப்பு சாப்பிட்டால்
இன்சுலின் போட வேண்டும்
உப்பு அதிகமானால்
உயர் ரத்த அழுத்தமாகும்
புளிப்பு என்றாலோ
பல் முழுதுமே கூசும்
கசப்பு சேர்த்தால்
கழுத்துக்குக் கீழ் போகாது
துவர்ப்பு உண்டால்
தொண்டை அடைக்கும்
காரம் வேண்டினால்
கண்டிப்பாக "அல்சராம்"
என்னத்த சம்பாரித்து
எதைத்தான் சாப்பிடுவியோ!?

Tuesday, January 13, 2009

தூக்கம் வருமா? ஏக்கம் தீருமா?

தலையைக் கீழே வைத்தவுடன்

தன்னை யறியாது தூங்குவது ஏன்

நினைத்துப்பார் உன்மனதில்

நிம்மதி யப்போது நிறைந்திருக்கும்

விலை கொடுத்தாலும் கிடைக்காது

வீண் அரட்டை கை கொடுக்காது

உடலும் மனதும் களைக்கும் வரை

உழைப்பவர் ரகசியம் அறிந்திடுவோம்

திவிர வாதம்





தீவிர வாதம்




அப்பாவி மக்களையே

தப்பாமல் சுட்டுக் கொல்ல

அணிவகுத்து வந்தது யாரு

மதமென்ற பெயராலே

மக்களை அழிககுமந்த

மாபாவிகளுக் கெந்த ஊரு

அண்டை நாடா இருந்தாலே

சண்டை நாடா இருக்குமென்ற

அவசியம் வந்ததென்ன கூறு

ஆதிக்க வெரியரெல்லாம்

அழிந்து பட்ட கதைகளையே

அமைதியாக நினைத்துக் கொஞ்சம் பாரு

வாயுக்கும் வயிற்றுக்கும்

வாதம் செய்யும் இளைஞருக்கு

தீவிர வாதத்தோடு நீ போட்ட சோறு

அமைதி அன்பு நேயத்திலே

ஆடி வரும் கங்கை யாறாம்

மானுடத்தில் நீ கலந்த சேறு

அல்லாவும் ஆண்டவனும்

அருட் தந்தை யேசுவுந்தான்

சேர்ந்து ஒன்றாய் வந்தால் இதுதீருமா

தீரும் வரை காத்திருக்க

தீவிரத்தை தாங்கி நின்று

திகழும் உயிர்கள் இங்கேதான் இருக்குமா /





Monday, January 12, 2009

பொங்கல் வாழ்த்து 2009

காடுகரை அலைய வேண்டாம்

கழனியில் கால் வைக்க வேண்டாம்

களத்தில் நெல் அடிக்க வேண்டாம்

கட்டிவெல்லம் வாங்க வேண்டாம்

இட்டமுடன் அரசு தரும் இலவசத்தில்

இனிய பொங்கல் படைப்போம் சரி

நட்டமின்றி நன்றி சொல்வது நாம்

ஆதவனுக்கா? அதன் சின்னத்துக்கா ?

பணம்...குணம்!


பணம்...குணம்!
பணம் காசு படைத்தவனுக்கு
பகல் இரவு தூக்கம் போச்சு
குணம் காத்து நின்றவனுக்கு
குறையில்லா வாழ்க்கை ஆச்சு
ஒன்று இருந்தால் ஒன்று இல்லை
இரண்டும் இருப்பதோ இறைவன் கருணை
நின்று நிதானித்து வாழ்க்கை நடத்து
நிச்சயம் இரண்டிலும் வெற்றி உனக்கு!!

Saturday, January 10, 2009

குலதெய்வம்


Tuesday, January 6, 2009

ஆபத்பாந்தவன்

ஆபத்து வந்ததென சொன்னவுடன்

அவநோடி வந்துமே உதவி நின்றான்

காபந்து செய்கின்ற கூட்டத்திலும்

கனிவாகப் பேசியே தனித்து நின்றான்

உயர்ந்த உள்ளதவன் யாரோவென

உதட்டைப் பிதுககினர் உறவினரும்

பிறர் அறியா ரகசியம் அவன் அறிவான்

'புரோநோட்டு காலாவதி ஆகுதென்று'