Thursday, April 23, 2009

இராமலிங்கம் ! [ 6-5-1982 ]

சேரன் மகளைச் சோழன் மணந்தான்-அந்த
சோழனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான்
வாழவநத திருமகனோ வாய்நிறை சிரிப்பைக் கொண்டான்
தாழவந்த பருந்தின் வேகம் தவழ்வதிலே தானும் கண்டான்
கொட்டிவிட்ட தேளின் வேகம் கொண்டே நகரக்கண்டான்
எட்டிவிட்ட பொருளனைத்தும் எடுத்தெறிந்து உடையக்கண்டான்
தட்டித்தான் கேட்பதற்கு தனக்குநிகர் யார்தான் என்றான்
வெட்டிப்பேச்சு எதற்கு வேகமுள்ள பேரன் என்றேன்
நல்ல அழுகைமூலம் நாபிதன் தேவை சொல்வான்
கள்ள அழுகை காட்டி கனிவுடனே எடுக்கச்செய்வான்
பொல்லா தாமதத்தை பொறுப்பாக்கிப் பாலை மறுப்பான்
மல்லுக்கு நின்றாலும் வாய்வைத்து உறுஞ்சமாட்டான்
பேருக்கு புகழுக்குப் பேரன்தான் பிறந்துவிட்டான்
பேறுபெற்ற பாட்டனின் பெயரையே தானும்கொண்டான்
ஊருக்கு உலகத்துக்கு உயர்வோன்தான் வந்துவிட்டான்
பேரதனைச் சொல்லுகிறேன் பேரன்பெயர்" இராமலிங்கம் "
கணநாதன் அருளாலே களிப்பான வாழ்வு பெறுவான்
குணவதியாம் கலைமகளின் கனிவாலே கல்விபெறுவான்
தனமகளின் பார்வையினை தவறாதுதான் பெறுவான்
எனதான வேல்முருகன் எப்போதும் துணையிருப்பான் ! ![

No comments: