Saturday, April 25, 2009

அமரன் சிரிப்பே சிரிப்பு !

" அமரன் சிரிப்பே சிரிப்பு " [ 9-5-1982 ]

மலர்கின்ற மலரெல்லாம் மலரேயல்ல
மங்கையவள் பெற்றதுதான் மலரேயாகும்
புலர்கின்ற பொழுதெல்லாம் பொழுதேயல்ல
பூவையவள் கண்டதுதான் பொழுதேயாகும்
வீசிவரும் காற்றெல்லாம் காற்றேயல்ல
கைவீசிவரும் பிள்ளைபட்ட காற்றேகாற்று
பூசுகின்ற அத்தர்மணம் மணமேயல்ல
புகழ்பெற்ற பிள்ளைமேனி ம்ணமேயாகும்
இசைக்கின்ற இசையனைத்தும் இசையேயல்ல
இவள்பிள்ளை இசைப்பதுதான் இசையேயாகும்
பேசுகின்ற பேச்சனைத்தும் பேச்சேயல்ல
பேரனவன் மழலைமட்டும் பேச்சேயாகும்
மயக்குகின்ற மதுவனைத்தும் மதுவேயல்ல
" மது " பிள்ளை தேன்வாய்நீர் மதுவேயாகும்
அயலார்கள் சிரிப்பதெல்லாம் சிரிப்பேயல்ல
அமரன்வாய் சிரிப்பதுதான் சிரிப்பேயாகும் ! !

Thursday, April 23, 2009

இராமலிங்கம் ! [ 6-5-1982 ]

சேரன் மகளைச் சோழன் மணந்தான்-அந்த
சோழனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான்
வாழவநத திருமகனோ வாய்நிறை சிரிப்பைக் கொண்டான்
தாழவந்த பருந்தின் வேகம் தவழ்வதிலே தானும் கண்டான்
கொட்டிவிட்ட தேளின் வேகம் கொண்டே நகரக்கண்டான்
எட்டிவிட்ட பொருளனைத்தும் எடுத்தெறிந்து உடையக்கண்டான்
தட்டித்தான் கேட்பதற்கு தனக்குநிகர் யார்தான் என்றான்
வெட்டிப்பேச்சு எதற்கு வேகமுள்ள பேரன் என்றேன்
நல்ல அழுகைமூலம் நாபிதன் தேவை சொல்வான்
கள்ள அழுகை காட்டி கனிவுடனே எடுக்கச்செய்வான்
பொல்லா தாமதத்தை பொறுப்பாக்கிப் பாலை மறுப்பான்
மல்லுக்கு நின்றாலும் வாய்வைத்து உறுஞ்சமாட்டான்
பேருக்கு புகழுக்குப் பேரன்தான் பிறந்துவிட்டான்
பேறுபெற்ற பாட்டனின் பெயரையே தானும்கொண்டான்
ஊருக்கு உலகத்துக்கு உயர்வோன்தான் வந்துவிட்டான்
பேரதனைச் சொல்லுகிறேன் பேரன்பெயர்" இராமலிங்கம் "
கணநாதன் அருளாலே களிப்பான வாழ்வு பெறுவான்
குணவதியாம் கலைமகளின் கனிவாலே கல்விபெறுவான்
தனமகளின் பார்வையினை தவறாதுதான் பெறுவான்
எனதான வேல்முருகன் எப்போதும் துணையிருப்பான் ! ![

Wednesday, April 8, 2009

மனிதனா ? கால்நடையா?

ஐந்தாண்டுக் கொருமுறை தேர்தல் வரும்
அனைவருமே என்னை வணங்குவார்கள்
பந்தியில் முதலிடம் எனக்கு அளித்து
பக்குவமாய் ப்ரியாணி பாயசவடை
வந்தித்து என்னை உண்ணவைத்து
வாருங்கள் வாக்குச் சாவடிக் கென்பார்
சொந்தக்கார் போல சொகுசாக போனநான்
சொன்னபடி வாக்களித்து வெளியே வந்தேன்
எந்தக்காரும் எனக்குக் காத்திருக்கவில்லை
என்னிடம் வாக்களித்தவர் ஆளேகாணோம்
சுந்தரமாய் காரில் போனவன் நான்
சூழ்ச்சியில் ' கால்நடையாய் 'திரும்பிவந்தேன் ! !

Friday, April 3, 2009

கடனை அடை !

ஐந்தாண்டு ஆட்டிப் படைக்கும் உரிமை
அனுபவிக்க முடிவு எடுக்கும் கூட்டம்
சந்தை வியாபாரத்தில் அடித்து வாங்க
சர்வ கட்சியிலும் சகல கலா வல்லவர்கள்
எந்தப் பகுதியை யார் ஆளுவது அது
சொந்த சொத்துக்களைப் பொறுத்ததாம்
க்ந்து வட்டியில் காத்திருக்கும் மன்னர்களே
இந்த முறை முழுவதுமாய்த் தீரட்டும் ! !

பார்த்த ஞாபகம் !

பார்த்த ஞாபகம் !

கனத்த உருவம் கசங்காத சட்டை
கரில் வந்து இறங்கியவரை
கைகுலுக்கி சிலர் வ்ரவேற்க
கத்திருந்த மக்களுக்கு எங்கோ
எப்போதோ பார்த்த ஞாபகம்
காத்தமுத்து பேரன் சொன்னான்
இவர் தானய்யா நம்ம எம்.பி
இந்த முறையும் தான் நிற்பதை
சொல்ல வ்ந்திருகிரார் என்றான்
இப்போது நினைவு வருகிறதென்றனர் ! !

முடிந்தால் சிரிக்க !



தேர்தல்ல சீட்டுக்கு அப்பா
ஏன் இப்படி அலையரார்?

இல்லைன்னா நாளைக்கு
உங்க காலேஜ் சீட்டுக்கு
இதைவிட அலையணுமே...!


மறப்போம் மன்னிப்போம்
என்றால் என்ன ?

தேர்தல் காலத்தில் திட்டித்
தீர்த்தவர்கள் கூட்டணி
ஆட்சியில் கூடி குலாவுவதாம்..!


நம்ம கோவிந்தசாமியை
அழைத்து வந்தது தப்பா
போச்சு...

ஏன்...என்னாச்சு ?

வேட்பு மனு தாக்கல் செய்து
வெளியே வந்தபோது
கோவிந்தா...கோவிந்தா....
என்று ஒரே சத்தம் !


நல்ல வேளை வக்கீல்கள்
பணிக்குத் திரும்பி விட்டனர்..!

உன் வழக்குத்தான் ஏதுமில்லையே..?

இல்லப்பா...முக்கிய தேர்தல்
வேலைக்கு நம் ஆட்களை
வெளியே கொண்டு வரணும்
அதான்....!

வேட்புமனு தாக்கலின் போதே
வெற்றிமாலை சூட்டியதாகச்
சொல்கிறார்களே...!

அட....நீங்க ஒண்ணு வெற்றிவேல்
போட்ட மாலையைச் சொல்றாருங்க ..!


சுற்றிப்பார்க்க வந்தவர் ஏன்
கிறு கிறுத்து விழுந்துவிட்டாராம் ?

அவர் தன்னைத் தானே சுற்றிக்
கொண்டு பார்த்தாராம்...!


முழுதும் தேடியும் ஒரு ஜோக்
தானே இருக்குது..?

இந்த புத்தகத்தில் ஒரே ஜோக்
என்று தானே நானும் சொன்னேன் !