Saturday, April 25, 2009

அமரன் சிரிப்பே சிரிப்பு !

" அமரன் சிரிப்பே சிரிப்பு " [ 9-5-1982 ]

மலர்கின்ற மலரெல்லாம் மலரேயல்ல
மங்கையவள் பெற்றதுதான் மலரேயாகும்
புலர்கின்ற பொழுதெல்லாம் பொழுதேயல்ல
பூவையவள் கண்டதுதான் பொழுதேயாகும்
வீசிவரும் காற்றெல்லாம் காற்றேயல்ல
கைவீசிவரும் பிள்ளைபட்ட காற்றேகாற்று
பூசுகின்ற அத்தர்மணம் மணமேயல்ல
புகழ்பெற்ற பிள்ளைமேனி ம்ணமேயாகும்
இசைக்கின்ற இசையனைத்தும் இசையேயல்ல
இவள்பிள்ளை இசைப்பதுதான் இசையேயாகும்
பேசுகின்ற பேச்சனைத்தும் பேச்சேயல்ல
பேரனவன் மழலைமட்டும் பேச்சேயாகும்
மயக்குகின்ற மதுவனைத்தும் மதுவேயல்ல
" மது " பிள்ளை தேன்வாய்நீர் மதுவேயாகும்
அயலார்கள் சிரிப்பதெல்லாம் சிரிப்பேயல்ல
அமரன்வாய் சிரிப்பதுதான் சிரிப்பேயாகும் ! !

No comments: