Sunday, February 15, 2009

ஆனந்தம் உன் இயல்பு ! !


ஆனந்தம் உன் இயல்பு ! !
ஆனந்தம் என்பது கடைச் சரக்கல்ல

அது உன் உள்ளத்து உணர்வே ஆகும்

ஏனந்த இயல்பை மறந்து மறந்து விட்டாய் ?

எதிர்மறை விளைவால் ஏங்குகிறாய்

தீதும் நன்றும் பிறர் தருவதல்ல

தீமையும் நன்மையும் உன் படைப்பாகும்

சூதும் வாதும் வேதனை செய்யும்

சூழ்நிலை மாறத் துணை உன் உழைப்பு

உண்மை பேசு உழைப்பை நாடு

உள்ளத்துக் கள்ளம் உதறித்தள்ளு

1 comment:

sivaprakasam srinivasan said...
This comment has been removed by the author.