Friday, April 3, 2009

முடிந்தால் சிரிக்க !



தேர்தல்ல சீட்டுக்கு அப்பா
ஏன் இப்படி அலையரார்?

இல்லைன்னா நாளைக்கு
உங்க காலேஜ் சீட்டுக்கு
இதைவிட அலையணுமே...!


மறப்போம் மன்னிப்போம்
என்றால் என்ன ?

தேர்தல் காலத்தில் திட்டித்
தீர்த்தவர்கள் கூட்டணி
ஆட்சியில் கூடி குலாவுவதாம்..!


நம்ம கோவிந்தசாமியை
அழைத்து வந்தது தப்பா
போச்சு...

ஏன்...என்னாச்சு ?

வேட்பு மனு தாக்கல் செய்து
வெளியே வந்தபோது
கோவிந்தா...கோவிந்தா....
என்று ஒரே சத்தம் !


நல்ல வேளை வக்கீல்கள்
பணிக்குத் திரும்பி விட்டனர்..!

உன் வழக்குத்தான் ஏதுமில்லையே..?

இல்லப்பா...முக்கிய தேர்தல்
வேலைக்கு நம் ஆட்களை
வெளியே கொண்டு வரணும்
அதான்....!

வேட்புமனு தாக்கலின் போதே
வெற்றிமாலை சூட்டியதாகச்
சொல்கிறார்களே...!

அட....நீங்க ஒண்ணு வெற்றிவேல்
போட்ட மாலையைச் சொல்றாருங்க ..!


சுற்றிப்பார்க்க வந்தவர் ஏன்
கிறு கிறுத்து விழுந்துவிட்டாராம் ?

அவர் தன்னைத் தானே சுற்றிக்
கொண்டு பார்த்தாராம்...!


முழுதும் தேடியும் ஒரு ஜோக்
தானே இருக்குது..?

இந்த புத்தகத்தில் ஒரே ஜோக்
என்று தானே நானும் சொன்னேன் !

No comments: