Wednesday, January 28, 2009

வானத்தின் எல்லை

எல்லை இல்லா இறைவனுக்கு
எங்கு ஆரத்தி காட்டுவது ?
அல்லது வடிவம் கொடுத்தால் அங்கு
எல்லை மீண்டும் வருகிறது
எல்லாம் அவனே என்னும்போது
எதுவும் நமக்குப் புரிவதில்லை
தொல்லை துயரம் வந்தால் மட்டும்
தொழுதே வானத்தை நோக்குகிறோம் !


No comments: