Tuesday, January 13, 2009

திவிர வாதம்





தீவிர வாதம்




அப்பாவி மக்களையே

தப்பாமல் சுட்டுக் கொல்ல

அணிவகுத்து வந்தது யாரு

மதமென்ற பெயராலே

மக்களை அழிககுமந்த

மாபாவிகளுக் கெந்த ஊரு

அண்டை நாடா இருந்தாலே

சண்டை நாடா இருக்குமென்ற

அவசியம் வந்ததென்ன கூறு

ஆதிக்க வெரியரெல்லாம்

அழிந்து பட்ட கதைகளையே

அமைதியாக நினைத்துக் கொஞ்சம் பாரு

வாயுக்கும் வயிற்றுக்கும்

வாதம் செய்யும் இளைஞருக்கு

தீவிர வாதத்தோடு நீ போட்ட சோறு

அமைதி அன்பு நேயத்திலே

ஆடி வரும் கங்கை யாறாம்

மானுடத்தில் நீ கலந்த சேறு

அல்லாவும் ஆண்டவனும்

அருட் தந்தை யேசுவுந்தான்

சேர்ந்து ஒன்றாய் வந்தால் இதுதீருமா

தீரும் வரை காத்திருக்க

தீவிரத்தை தாங்கி நின்று

திகழும் உயிர்கள் இங்கேதான் இருக்குமா /





No comments: