Sunday, February 1, 2009

பெருசு கொஞ்சம் நகரு 1

விதை பிளக்கிறது முளை வருகிறது
முளை வளர்கிறது செடி உயர்கிறது
செடி பூக்கிறது பூ காய்க்கிறது
காய் கனிகிறது கனி விழுகிறது
கனியின் விதையில் காலம் சுழல்கிறது
மனிதனின் இயற்கை சக்கரமும் இதுதான்
ஆனால் பழுத்த மனிதனுக்குப் பட்டம் "பெருசு"
பழுத்தோலை பார்த்து குருத்தோலை சிரிக்கிறது!!

No comments: