Thursday, January 29, 2009

நன்கொடை

நல்ல நிகழ்ச்சிக்கு நன்கொடையாம்

பத்தாயிரம் அளிக்க அவன் நினைத்தான்

பத்திரிக்கை வர நாளாயிற்று

பாதி கொடுத்தால் போதுமேன்றான்

இரவும் பகலுமாய் இரண்டுநாளில் அது

இரண்டாயிரம் என்றான் மனைவி மூலம்

வருவதாக தொலைபேசியில் சொன்னார்கள்

இருப்பதைக் கொடுப்போம் வரட்டும் என்றான்

வந்தவர்களை எப்படி சும்மா அனுப்புவது

வந்த செலவுக்கு நூறு முடிவானது

No comments: