Tuesday, February 3, 2009

பழமையும் புதுமையும்

பழமையின் பழக்கம் எதுவென்றாலும்

பயத்தில் ஏற்பது அழகல்ல அதன்

பொருளை நன்றாய்ப் புரிந்துக்கொண்டு

போற்றவும் அகற்றவும் செய்துவிடு

அறிவியல் முன்னேற்றம் அடையா நாளில்

ஆளைதொட்டால் தீட்டு என்றார்

நெறிமுறை வாழ்வில் தவறிவிட்டு

நேர்த்திக்கடனதான் வழி என்றார் !
அன்றைய சூழல் அன்றைய வாழ்வு
அதில் ஒருபடி மேலுள்ளது இன்று
சென்றைய நாளை தொங்கிக்கொண்டு
சேற்றில் நடப்பது என்ன பயன்
பழமையைப் புரிந்து கொள்
புதுமையை ஏற்றுக் கொள்
பாமரத் தன்மைக்கு விடை கொடு
பட்டறிவின்படி முடிவெடு !!

No comments: