Monday, March 23, 2009

வாழ்த்துகிறேன் !

முத்துக் குமரனின் முத்தான " ஆரோக்கியம் "நூல்

முழுவதுமாய்ப் பார்த்தேன் படித்தேன் சுவைத்தேன்

சத்தான கருத்துக்களை சலிக்காது பல கூறி

சாத்துக் கவிதைக்கான சாதனை படைத்துள்ளார்

சத்தியத்தையே சார்ந்திரு ' சரி, கம, பத, நீ, பாடிடு '

சாயுச்யத்தைக் கூறும் அழகை மிக ரசித்தேன்

நித்தமும் பெற்றோரை மற்றோரை வணக்கும்முறை நான்

நீண்டகாலமாகச் செய்கிறேன் !நிறைவாகப் பாராட்டுகிறேன்!

Saturday, March 21, 2009

ஆத்ம திருப்தி !



எல்லோரையும் திருப்திபடுத்த
எவராலும் முடியாது
எவருடைய எதிர்பார்ப்புக்கும
எதைப் பலியிட்டுமாகாது

பிறர் வாழ்வைத் திருத்துவதை
விட்டுவிடு
உன் வாழ்வை நீ வாழ
முயற்சி எடு

விதைக்கும் விதையாய்
நீ இருந்தால்
வீசும் மணம் அதில்
இருக்காது

மலர்ந்த மலராய்
நீ இருந்தால்
மகரந்த தேனும் அதில்
இருக்கும்

அன்பால் வாழ்வை
மலரச் செய்வாய்
ஆத்ம திருப்தியில்
நீ வாழ்வாய் ! !

Sunday, March 15, 2009

PRIYA DANCE 0001

Monday, March 2, 2009

கடமையை செய் பலனைப் பாராதே !


விருது வேண்டுமென்று

நடிப்பவற்கும் துடிப்பவர்க்கும்

விருது கிடைப்பதில்லை

எல்லாப் புகழும் தனக்கே

என்பவர்க்கு எதுவும் வருவதில்லை

இறைவனுக்கே புகழ் எல்லாம்

என்பவர்க்கு இரண்டு

ஆஸ்கார் விருதுகள் !

பாட்டை நீ பாடு

பலனை இறைவனிடம் விடு

கீதை சொல்வது

இதுவாக இருக்குமோ ? !



பசிக்கு உறவு !

ஊரில் திருமணம் மாரில் சந்தணம்
உள்ளே நுழைந்தவனை யாரென்றார்கள்
இல்லாத அழைப்புக்கு இவன் விருந்தாளி
சொல்லவா முடியும் தோன்றிய கணத்தில்
கல்லூரி நண்பன் மாப்பிள்ளை என்றான்
கழிசடை எல்லாம் காத்திரு என்றனர் ஏனாம்?
இவனுக்கு நடப்பது இறுபத்தியாறு
மாப்பிள்ளைக்கு நடப்பது " அறுபது கல்யாணம் "