Wednesday, April 8, 2009

மனிதனா ? கால்நடையா?

ஐந்தாண்டுக் கொருமுறை தேர்தல் வரும்
அனைவருமே என்னை வணங்குவார்கள்
பந்தியில் முதலிடம் எனக்கு அளித்து
பக்குவமாய் ப்ரியாணி பாயசவடை
வந்தித்து என்னை உண்ணவைத்து
வாருங்கள் வாக்குச் சாவடிக் கென்பார்
சொந்தக்கார் போல சொகுசாக போனநான்
சொன்னபடி வாக்களித்து வெளியே வந்தேன்
எந்தக்காரும் எனக்குக் காத்திருக்கவில்லை
என்னிடம் வாக்களித்தவர் ஆளேகாணோம்
சுந்தரமாய் காரில் போனவன் நான்
சூழ்ச்சியில் ' கால்நடையாய் 'திரும்பிவந்தேன் ! !

No comments: