Saturday, March 21, 2009

ஆத்ம திருப்தி !



எல்லோரையும் திருப்திபடுத்த
எவராலும் முடியாது
எவருடைய எதிர்பார்ப்புக்கும
எதைப் பலியிட்டுமாகாது

பிறர் வாழ்வைத் திருத்துவதை
விட்டுவிடு
உன் வாழ்வை நீ வாழ
முயற்சி எடு

விதைக்கும் விதையாய்
நீ இருந்தால்
வீசும் மணம் அதில்
இருக்காது

மலர்ந்த மலராய்
நீ இருந்தால்
மகரந்த தேனும் அதில்
இருக்கும்

அன்பால் வாழ்வை
மலரச் செய்வாய்
ஆத்ம திருப்தியில்
நீ வாழ்வாய் ! !

No comments: