Tuesday, January 27, 2009

நிம்மதி

நிம்மதி என்பது எங்கிருக்கு உன்
நினைவில் செயலில் தானிருக்கு
மற்றவர் தேவைக் குதவும் போது
மனதில் தோன்றும் நிம்மதி
பெற்றவள் சிரிப்பைக் காணும்போது
பெருகும் அங்கே நிம்மதி
உற்றவள் பிடித்ததை வாங்கும் போது
உனக்கும் அவளுக்கும் நிம்மதி
குற்றம் குறைகளைத் தள்ளும்போது
கூடும் வாழ்வில் நிம்மதி !!

No comments: