கோவையில் எனது சித்தி வீட்டில் சென்ற வாரம் நடை பெற்ற கொலுவின் ஒரு சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.
Saturday, October 18, 2008
Wednesday, October 15, 2008
Thursday, October 9, 2008
Tuesday, October 7, 2008
Monday, September 22, 2008
வீடு அல்லது நிலம் வாங்கும் போது
நீங்கள் வீடு அல்லது நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில உபயோகமான டிப்ஸ் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்தால் கிடைக்கும்.
படித்து பலனடையுங்கள் .
http://sites.google.com/site/modernsiva/land-purchase-tips
படித்து பலனடையுங்கள் .
http://sites.google.com/site/modernsiva/land-purchase-tips
Tuesday, September 9, 2008
அன்புடையீர்
ராமாயணம் எளிய தமிழில் எழுதியுள்ள திரு.கே.ஏ.சீனிவாசன் அவர்களின்
படைப்பினை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம் .
புத்தகத்தினைப் படிக்க கீழ்க் கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்
http://sites.google.com/site/modernsiva/welcome
ராமாயணம் எளிய தமிழில் எழுதியுள்ள திரு.கே.ஏ.சீனிவாசன் அவர்களின்
படைப்பினை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம் .
புத்தகத்தினைப் படிக்க கீழ்க் கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்
http://sites.google.com/site/modernsiva/welcome
Friday, September 5, 2008
புனித கைலாய யாத்திரை !

புனித கைலாய யாத்திரை
கோவை எனது பெரியம்மா திருமதி பா .சாந்தகுமாரி அவர்கள் கடந்த ஆகஸ்ட் பதினான்கு அன்று திருக்கைலாய யாத்திரை புறப்பட்டு சென்று சிவபெருமானின் திருவருளால் கைலாய தரிசனம் பெற்று செப்டம்பர் ஒன்றாம் தேதி நலமுடன் திரும்பினார்கள் .அவர்களை நாமும் வணங்கி ஆசி பெறுவோம் .
இப்படிக்கு
மதுமதி ரத்தினசபாபதி
Thursday, August 7, 2008
நன்றி
அன்புடையீர்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் உரித்தாகுக.
விரைவில் பல புதிய பகுதிகள் வர இருக்கின்றன.
மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்
சிவப்பிரகாசம்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் உரித்தாகுக.
விரைவில் பல புதிய பகுதிகள் வர இருக்கின்றன.
மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்
சிவப்பிரகாசம்
Saturday, August 2, 2008
Sunday, July 27, 2008
Saturday, July 26, 2008
Friday, July 25, 2008

திருக்குற்றாலம் !
சாரல் நனைக்கும் சங்கதி பாடும்
ஆரல் துள்ளும் அழகு சிரிக்கும்
ஊரல் பறக்கும் உள்ளம் களிக்கும்
வேரல் நுனி நீர் வேதம் சொல்லும்
மானின் பாச்சல் மந்தியின் தாவல்
கானல் மயிலின் களிதரு நடனம்
வானத்து கங்கையாய் வழிந்திடும் அருவி
சீனத்து மத்தாப்பாய சிதரிடும் மாட்சி
மண்ணும் மணக்கும் மரமும் மருவும்
விண்ணும் ஒழுகும் விரகம் தீர்க்கும்
கண்ணும் குளிரும் காட்சிகள் மாறும்
பண்ணும் இசைக்கும் பரதம் பிறக்கும்
மயக்கும் மாருதம் மலர்களைத் தழுவும்
மயங்காத வண்டுகள் ரீங்காரம் பாடும்
இயற்கையின் சிரிப்பை இசைந்தே காண்பாய்
இயல்பாய் வணங்கு இறைவன் அருள்வான்!
Thursday, July 24, 2008

ஆடி வெள்ளி தேடி வணங்கு !
மாரியம்மன் சன்னதிக்கு வந்து சேருங்கள்
மாரியம்மன் சன்னதிக்கு வந்து சேருங்கள்
மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வாருங்கள்
சீரோடு சிறப்பான வாழ்க்கை வேண்டுங்கள்
சிம்மவாகினி அவளிடமே சரணடையுங்கள்
திருமகளின் பெருமைகளை திசை பரப்புங்கள்
தீராத வினைகளுக்கு முடிவு கட்டுங்கள்
அன்னை ஆதிசக்தி அருள் வேண்டி நில்லுங்கள்
ஐநூற்றுவர் குலம் தழைக்க வேண்டிக்கொள்ளுங்கள்
திருமகளின் பெருமைகளை திசை பரப்புங்கள்
தீராத வினைகளுக்கு முடிவு கட்டுங்கள்
அன்னை ஆதிசக்தி அருள் வேண்டி நில்லுங்கள்
ஐநூற்றுவர் குலம் தழைக்க வேண்டிக்கொள்ளுங்கள்
அடுத்த பிறவி
ஊமையாய் முடமாய்
பேயாய் குருடாய்
கூனாய் செவிடாய்
பித்தாய் பிணியுடனா
பிறப்பித்தான் உன்னை ?
கண்ணும் காதும் வசமாக்கி
கையும் காலும் செயலாக்கி
எண்ணும் எண்ணம் நலமாக்கி
ஏழ்மை நீக்கு என்றான் அவன்
நாக்கால் சுடுகிறாய்
நானென்று அலைகிறாய்
நம்பி வந்தவரையும்
நட்டாற்றில் விடுகிறாயே !
அடுத்து வரும் பிறவிக்கு
அச்சாரம் போட்டு விட்டாய்
கெடுப்பதை நிறுத்தா விட்டால்
கேடு கெட்ட பிறவி வரும் !
ஊமையாய் முடமாய்
பேயாய் குருடாய்
கூனாய் செவிடாய்
பித்தாய் பிணியுடனா
பிறப்பித்தான் உன்னை ?
கண்ணும் காதும் வசமாக்கி
கையும் காலும் செயலாக்கி
எண்ணும் எண்ணம் நலமாக்கி
ஏழ்மை நீக்கு என்றான் அவன்
நாக்கால் சுடுகிறாய்
நானென்று அலைகிறாய்
நம்பி வந்தவரையும்
நட்டாற்றில் விடுகிறாயே !
அடுத்து வரும் பிறவிக்கு
அச்சாரம் போட்டு விட்டாய்
கெடுப்பதை நிறுத்தா விட்டால்
கேடு கெட்ட பிறவி வரும் !
Wednesday, July 23, 2008
இதயத்தை அறிவுடன் பேசவிடு
உன்னைப் படைத்த இறைவன்
ஊனம் ஏதும் வைக்கவில்லை
உன்னத வாழ்வு உனக்கென்று
உழைத்தால் பெறலாம் உறுதி என்றான்
எறும்பு சேர்க்கும் தானியத்தை
என்றாவது ஒருநாள் கண்டதுண்டா
துரும்பைக் கூட அசைக்காமல்
தூங்கித் தின்பதில் சுகம் என்ன?
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
ஏதோ நல்லது நீ செய்தால்
அத்தனை பிறவியும் பயனாகும்
அகிலமே உன்னைப் பாராட்டும்
மனித உயிராய்ப் பிறந்துவிட்டு
மற்றைய உயிர்களுக் கென்ன செய்தாய்
இனியும் தாமதம் தவிர்த்துவிடு
இதயத்தை அறிவுடன் பேசவிடு !
உன்னைப் படைத்த இறைவன்
ஊனம் ஏதும் வைக்கவில்லை
உன்னத வாழ்வு உனக்கென்று
உழைத்தால் பெறலாம் உறுதி என்றான்
எறும்பு சேர்க்கும் தானியத்தை
என்றாவது ஒருநாள் கண்டதுண்டா
துரும்பைக் கூட அசைக்காமல்
தூங்கித் தின்பதில் சுகம் என்ன?
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
ஏதோ நல்லது நீ செய்தால்
அத்தனை பிறவியும் பயனாகும்
அகிலமே உன்னைப் பாராட்டும்
மனித உயிராய்ப் பிறந்துவிட்டு
மற்றைய உயிர்களுக் கென்ன செய்தாய்
இனியும் தாமதம் தவிர்த்துவிடு
இதயத்தை அறிவுடன் பேசவிடு !
Tuesday, July 22, 2008
Sunday, July 20, 2008
திருட்டுப் போனது !
திருட்டுப் போனதென புகார் கொடுத்தவுடன்
திருடனைப் பிடிக்க ஒரு ஜீப் வந்தது
விரிவான விசாரணை விரல்ரேகை என
விரைவான செயலுக்கு எதுவும் வாங்கவில்லை
நாட்கள் நகர்ந்தன நாளொருவர் வந்தார்
நம்மைத் துருவினார் நமக்கு செலவு வைத்தார்
திருட்டைக் கொடுத்ததோடு நின்றிருக்கலாம்
இப்ப கொடுத்த புகாரையும் திரும்ப பெறமுடியவில்லை !
என்ன செய்யலாம் .....?!
திருட்டுப் போனதென புகார் கொடுத்தவுடன்
திருடனைப் பிடிக்க ஒரு ஜீப் வந்தது
விரிவான விசாரணை விரல்ரேகை என
விரைவான செயலுக்கு எதுவும் வாங்கவில்லை
நாட்கள் நகர்ந்தன நாளொருவர் வந்தார்
நம்மைத் துருவினார் நமக்கு செலவு வைத்தார்
திருட்டைக் கொடுத்ததோடு நின்றிருக்கலாம்
இப்ப கொடுத்த புகாரையும் திரும்ப பெறமுடியவில்லை !
என்ன செய்யலாம் .....?!
Thursday, July 17, 2008
அகவை எழுபத்தி ஐந்து!
எனக்கு வயது எழுபத்தி ஐந்து!
என்னுள் வியப்பு தாங்கவில்லை
எனக்கு உற்ற நிகழ்வுகள்
நான் பெற்ற அனுபவங்கள்
நினைத்துப் பார்கிறேன்
நீண்டதொரு பெரு மூச்சு
மலரும் நினைவுகளை
அசை போட்டு மகிழ்கிறேன்
ஆண்டவனுக்கு நன்றி
என்னில் பெரியோரை
வணங்குகிறேன்
எனக்கு இளையோரை
வாழ்துகிறேன்
எல்லோரும் வாழ்க
எல்லா நலனும் பெறுக
நல்லதை நினைப்போம்
நலமே வாழ்வோம் !
சென்னை-47 வாழ்க வளமுடன்
19.07.2008 கேஏசீனிவாசன்
_
Wednesday, July 16, 2008
Tuesday, July 15, 2008
Monday, July 14, 2008
Sunday, July 13, 2008
தொலை பேசி !
ஒரே ஒரு ஊரிலே ஒரேஒரு தொலைபேசி
உள்ளுரில் பேசும் எண்ணுக்கு உதவி கோரவேண்டும்
பேசி முடித்துவிட்டால் பெரிய சாதனைதான்
கூசாமல் பேசியதை கூடி பெருமையடைவர்
தொலைதூரம் பேசுவதற்கு சொம்புத் தண்ணி பத்தாது
அலை வரிசை கிடைப்பதற்கு அடுத்தநாளும் ஆகலாம்
கைபேசி இப்போது ஒன்றுக்கு இரண்டு இலவசம்
இரண்டு வாங்கினாலோ ஐந்து இலவசமாம்!
ஒரே ஒரு ஊரிலே ஒரேஒரு தொலைபேசி
உள்ளுரில் பேசும் எண்ணுக்கு உதவி கோரவேண்டும்
பேசி முடித்துவிட்டால் பெரிய சாதனைதான்
கூசாமல் பேசியதை கூடி பெருமையடைவர்
தொலைதூரம் பேசுவதற்கு சொம்புத் தண்ணி பத்தாது
அலை வரிசை கிடைப்பதற்கு அடுத்தநாளும் ஆகலாம்
கைபேசி இப்போது ஒன்றுக்கு இரண்டு இலவசம்
இரண்டு வாங்கினாலோ ஐந்து இலவசமாம்!
நீ அதுவேதான்
காலைப் பொழுது விடியுமுன்னே
கனிவுடன் புட்களின் பூபாளம்
ஆலைச் சங்கு ஒலிககு முன்னே
அபிநயம் பழகும் மயிலினங்கள்
மழையின் ஈரம் காயு முன்னே
மண்ணில் வீசும் தனித்த மணம்
ம்ழலை மொழி புரியுமு ன்னே
மனதில் நெகிழும் இசை அலைகள்
இயற்கை படைப்பு அனைத்திலுமே
இறைவன் இருப்பதை உணராமல்
செயற்கைத் தேடலை உருவாக்கி
செக்கு மாடாய் சுற்றுவது ஏன்?
உள்ளுணர்வின் சொல் கேட்கு முன்னே
உனக்குள் இருப்பது யாரெனப்பார்!
எள்ளளவாவது அறிந்து கொள்வாய்
எப்போதும் " நீ , அதுவேதான்"
காலைப் பொழுது விடியுமுன்னே
கனிவுடன் புட்களின் பூபாளம்
ஆலைச் சங்கு ஒலிககு முன்னே
அபிநயம் பழகும் மயிலினங்கள்
மழையின் ஈரம் காயு முன்னே
மண்ணில் வீசும் தனித்த மணம்
ம்ழலை மொழி புரியுமு ன்னே
மனதில் நெகிழும் இசை அலைகள்
இயற்கை படைப்பு அனைத்திலுமே
இறைவன் இருப்பதை உணராமல்
செயற்கைத் தேடலை உருவாக்கி
செக்கு மாடாய் சுற்றுவது ஏன்?
உள்ளுணர்வின் சொல் கேட்கு முன்னே
உனக்குள் இருப்பது யாரெனப்பார்!
எள்ளளவாவது அறிந்து கொள்வாய்
எப்போதும் " நீ , அதுவேதான்"
Saturday, July 12, 2008
எழுச்சி மலரட்டும்
நம்மவர் மகளிரை ஒன்று திரட்டுவோம்!
நாடெல்லாம் நம்திறமை பறைசாற்றுவோம்!
நாம் கற்ற கலைகளை அரங்கேறறுவோம்!
நாம் பெற்ற அனுபவம் பகிர்ந்துகொள்வோம்!
இம்மையில் சாதிக்கப் பயிற்சி செய்வோம்!
இதற்கென களம் அமைத்துப் பரிசளிப்போம் !
எம்மையோர் பெருமைகளை எடுத்து ச்சொல்வோம்!
ஏற்றமிகு எழுச்சியில் நிறைந்து வாழ்வோம்!
நம்மவர் மகளிரை ஒன்று திரட்டுவோம்!
நாடெல்லாம் நம்திறமை பறைசாற்றுவோம்!
நாம் கற்ற கலைகளை அரங்கேறறுவோம்!
நாம் பெற்ற அனுபவம் பகிர்ந்துகொள்வோம்!
இம்மையில் சாதிக்கப் பயிற்சி செய்வோம்!
இதற்கென களம் அமைத்துப் பரிசளிப்போம் !
எம்மையோர் பெருமைகளை எடுத்து ச்சொல்வோம்!
ஏற்றமிகு எழுச்சியில் நிறைந்து வாழ்வோம்!
Friday, July 11, 2008
Friday, July 4, 2008
மாட்டிய மாப்பிள்ளை !
ஈதல் இசைபட வாழ்தல்

மனதைக் கட்டி ஆள முடிந்தவன்
மனிதரில் புனிதன் ஆகின்றான்
மனிதரில் புனிதன் ஆகின்றான்
மற்றவர் மனதைப் படிக்க தெரிந்தவன்
மகத்துவம் அடைந்தே வாழ்கின்றான் !
தன்னை தானே உணர்பவரெல்லாம்
தர்மத்தை என்றும் வளர்க்கின்றார்
தன்னுயிர் போல மன்னுயிர் காண்போர்
தரணியில் என்றும் நிலைகின்றார் !
இரையை தேடும் மனிதன் என்றும்
இனிதாம் நிம்மதி காண்பதில்லை
இறையை நாடும் மனிதன் என்றும்
ஈதல் இசைபட வாழ்கின்றான் !
மண்ணில் புகழோடு வாழ்ந்தவரெல்லாம்
மண்ணுக்கு இரை தான் ஆவதில்லை
கண்ணுக்கு தெரியா சக்திகளுடனே
விண்ணில் கலந்தே உலவுகின்றார் !
விலை வாசி
Thursday, July 3, 2008
கானல் நீர்
தகிக்கிறது வெப்பம்தாகத்தில் மயக்கம்
அகிலமே உருகும்படி
அகிலமே உருகும்படி
அனற் காற்றின் ஆவேசம்
சகிக்க இயலவில்லை
சந்திக்க திராணியில்லை
நெகிழ்ந்த நெஞ்சுக்கு
நெறிஞ்சிப்பூ ஒத்தடம் !
நீரில் மூழ்கியிருந்தால்
நிம்மதி கிடைத்திருக்கும்
ஊரில் பெரிய ஏரி
உள்ளதும் வறண்ட நிலை
மாரி மழை பெய்திடவே
மாரி மழை பெய்திடவே
மகா யாகம் நடந்தாச்சு
காரிய சாலை நீர்
கண்டது வாய்க்கு எப்போ ?!
Sunday, June 15, 2008
இனி நாம் யாரையும் ஏமாற்ற வேண்டாம்
யாருக்கும் நாம் இனி ஏமாளி அல்ல
"கொங்கு செட்டி" எனக் கூறுவதற்கு
கோபுர கலச ஆதாரம் அளித்து
பொங்கும் மகிழ்வு எங்கும் நிறைய
பொறுப்பான கடமை சிறப்பாக ஆற்றி
"நம்மவர்" மனதில் நிமமதி கான
நம்பிக்கை தந்த நல்லவர், வல்லவர்
சூலூர் தெய்வ சேஷகிரி அவர்கள்
சூழும் புகழுடன் வாழ்க ! வாழ்க!!
Tuesday, June 10, 2008
பாவம் பாட்டி
சுட்டெரிக்கும் வெயில்
சூரியனுக்கே சுடுகிறதாம்
குட்டை குளமெல்லாம்
குழந்தைகளுக்கு மைதானம்
மட்டைப் பந்தாட்டத்தில்
மாவீரன் மாரிமுத்து
கட்டிப் பஞ்சாயத்தில்
கவர்ந்த வெற்றி மாலை
கொட்டம் அடித்துக்கொண்டு
கொண்டாடும் நேரம்
திட்டம் ஏதுமின்றி
திடீர் கோ டை மழை
முட்ட நனைந்து நின்ற
முருகனை கே ட்டதற்கு
பாட்டி வடகம் போ ட்டதால்
பாவம் அது வென்றான்
சுட்டெரிக்கும் வெயில்
சூரியனுக்கே சுடுகிறதாம்
குட்டை குளமெல்லாம்
குழந்தைகளுக்கு மைதானம்
மட்டைப் பந்தாட்டத்தில்
மாவீரன் மாரிமுத்து
கட்டிப் பஞ்சாயத்தில்
கவர்ந்த வெற்றி மாலை
கொட்டம் அடித்துக்கொண்டு
கொண்டாடும் நேரம்
திட்டம் ஏதுமின்றி
திடீர் கோ டை மழை
முட்ட நனைந்து நின்ற
முருகனை கே ட்டதற்கு
பாட்டி வடகம் போ ட்டதால்
பாவம் அது வென்றான்
Sunday, June 8, 2008
Nammavargal: மதிப்பெண்களைக் குவிக்கும் நமது கண்மணிகளின் பட்டியல்
Nammavargal: மதிப்பெண்களைக் குவிக்கும் நமது கண்மணிகளின் பட்டியல்
Aravind Palaniappan S/o P.Gopalakrishnan & S.Renukadevi,Uttukuli R S has scored 469/500 in the recent matric exam.
Aravind Palaniappan S/o P.Gopalakrishnan & S.Renukadevi,Uttukuli R S has scored 469/500 in the recent matric exam.
Subscribe to:
Posts (Atom)








