Thursday, July 3, 2008

கானல் நீர்

தகிக்கிறது வெப்பம்
தாகத்தில் மயக்கம்
அகிலமே உருகும்படி
அனற் காற்றின் ஆவேசம்
சகிக்க இயலவில்லை
சந்திக்க திராணியில்லை
நெகிழ்ந்த நெஞ்சுக்கு
நெறிஞ்சிப்பூ ஒத்தடம் !
நீரில் மூழ்கியிருந்தால்
நிம்மதி கிடைத்திருக்கும்
ஊரில் பெரிய ஏரி
உள்ளதும் வறண்ட நிலை
மாரி மழை பெய்திடவே
மகா யாகம் நடந்தாச்சு
காரிய சாலை நீர்
கண்டது வாய்க்கு எப்போ ?!




1 comment:

sivaprakasam srinivasan said...

well done
good try
keep it up
you can edit the post also
go to help and find how to edit the post
if u not find inform me
siva