Thursday, July 24, 2008



ஆடி வெள்ளி தேடி வணங்கு !

மாரியம்மன் சன்னதிக்கு வந்து சேருங்கள்
மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வாருங்கள்
சீரோடு சிறப்பான வாழ்க்கை வேண்டுங்கள்
சிம்மவாகினி அவளிடமே சரணடையுங்கள்

திருமகளின் பெருமைகளை திசை பரப்புங்கள்
தீராத
வினைகளுக்கு முடிவு கட்டுங்கள்
அன்னை
ஆதிசக்தி அருள் வேண்டி நில்லுங்கள்
ஐநூற்றுவர்
குலம் தழைக்க வேண்டிக்கொள்ளுங்கள்


No comments: