Wednesday, July 23, 2008

இதயத்தை அறிவுடன் பேசவிடு


உன்னைப் படைத்த இறைவன்

ஊனம் ஏதும் வைக்கவில்லை

உன்னத வாழ்வு உனக்கென்று

உழைத்தால் பெறலாம் உறுதி என்றான்

எறும்பு சேர்க்கும் தானியத்தை

என்றாவது ஒருநாள் கண்டதுண்டா

துரும்பைக் கூட அசைக்காமல்

தூங்கித் தின்பதில் சுகம் என்ன?

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்

ஏதோ நல்லது நீ செய்தால்

அத்தனை பிறவியும் பயனாகும்

அகிலமே உன்னைப் பாராட்டும்

மனித உயிராய்ப் பிறந்துவிட்டு

மற்றைய உயிர்களுக் கென்ன செய்தாய்

இனியும் தாமதம் தவிர்த்துவிடு

இதயத்தை அறிவுடன் பேசவிடு !

No comments: