Sunday, July 13, 2008

நீ அதுவேதான்

காலைப் பொழுது விடியுமுன்னே

கனிவுடன் புட்களின் பூபாளம்

ஆலைச் சங்கு ஒலிககு முன்னே

அபிநயம் பழகும் மயிலினங்கள்

மழையின் ஈரம் காயு முன்னே

மண்ணில் வீசும் தனித்த மணம்

ம்ழலை மொழி புரியுமு ன்னே

மனதில் நெகிழும் இசை அலைகள்

இயற்கை படைப்பு அனைத்திலுமே

இறைவன் இருப்பதை உணராமல்

செயற்கைத் தேடலை உருவாக்கி

செக்கு மாடாய் சுற்றுவது ஏன்?

உள்ளுணர்வின் சொல் கேட்கு முன்னே

உனக்குள் இருப்பது யாரெனப்பார்!


எள்ளளவாவது அறிந்து கொள்வாய்

எப்போதும் " நீ , அதுவேதான்"







No comments: