Friday, July 4, 2008

ஈதல் இசைபட வாழ்தல்


மனதைக் கட்டி ஆள முடிந்தவன்
மனிதரில் புனிதன் ஆகின்றான்
மற்றவர் மனதைப் படிக்க தெரிந்தவன்
மகத்துவம் அடைந்தே வாழ்கின்றான் !

தன்னை தானே உணர்பவரெல்லாம்
தர்மத்தை என்றும் வளர்க்கின்றார்
தன்னுயிர் போல மன்னுயிர் காண்போர்
தரணியில் என்றும் நிலைகின்றார் !


இரையை தேடும் மனிதன் என்றும்
இனிதாம் நிம்மதி காண்பதில்லை
இறையை நாடும் மனிதன் என்றும்
ஈதல் இசைபட வாழ்கின்றான் !


மண்ணில் புகழோடு வாழ்ந்தவரெல்லாம்
மண்ணுக்கு இரை தான் ஆவதில்லை
கண்ணுக்கு தெரியா சக்திகளுடனே
விண்ணில் கலந்தே உலவுகின்றார் !


No comments: