Thursday, July 24, 2008

அடுத்த பிறவி
ஊமையாய் முடமாய்

பேயாய் குருடாய்

கூனாய் செவிடாய்

பித்தாய் பிணியுடனா

பிறப்பித்தான் உன்னை ?

கண்ணும் காதும் வசமாக்கி

கையும் காலும் செயலாக்கி

எண்ணும் எண்ணம் நலமாக்கி

ஏழ்மை நீக்கு என்றான் அவன்

நாக்கால் சுடுகிறாய்

நானென்று அலைகிறாய்

நம்பி வந்தவரையும்

நட்டாற்றில் விடுகிறாயே !

அடுத்து வரும் பிறவிக்கு

அச்சாரம் போட்டு விட்டாய்

கெடுப்பதை நிறுத்தா விட்டால்

கேடு கெட்ட பிறவி வரும் !

No comments: