Sunday, July 20, 2008

திருட்டுப் போனது !

திருட்டுப் போனதென புகார் கொடுத்தவுடன்

திருடனைப் பிடிக்க ஒரு ஜீப் வந்தது

விரிவான விசாரணை விரல்ரேகை என

விரைவான செயலுக்கு எதுவும் வாங்கவில்லை

நாட்கள் நகர்ந்தன நாளொருவர் வந்தார்

நம்மைத் துருவினார் நமக்கு செலவு வைத்தார்

திருட்டைக் கொடுத்ததோடு நின்றிருக்கலாம்

இப்ப கொடுத்த புகாரையும் திரும்ப பெறமுடியவில்லை !

என்ன செய்யலாம் .....?!

No comments: