Tuesday, July 15, 2008

புலரும் பொழுது

பொழுது புலர்ந்தது பொன்னாய்மலர்ந்தது

புறவிதழ் அவிழ நறுமணம் கமழ

எழுந்தன புட்கள் இன்னிசை பாட

ஏங்கிய தாமரை முகமது மலர

அழுங்கிய வண்டுகள் பனிசிறகுதற

ஆயிரம் மின்னொளி வண்ணமாய் மின்ன

தொழும் அடியார்கள் குணதிசை நாட

திருவடி தொழுவோம் திரை இருள் அகல!







No comments: