Tuesday, June 10, 2008

பாவம் பாட்டி
சுட்டெரிக்கும் வெயில்
சூரியனுக்கே சுடுகிறதாம்
குட்டை குளமெல்லாம்
குழந்தைகளுக்கு மைதானம்
மட்டைப் பந்தாட்டத்தில்
மாவீரன் மாரிமுத்து
கட்டிப் பஞ்சாயத்தில்
கவர்ந்த வெற்றி மாலை
கொட்டம் அடித்துக்கொண்டு
கொண்டாடும் நேரம்
திட்டம் ஏதுமின்றி
திடீர் கோ டை மழை
முட்ட நனைந்து நின்ற
முருகனை கே ட்டதற்கு
பாட்டி வடகம் போ ட்டதால்
பாவம் அது வென்றான்

No comments: