Saturday, January 31, 2009
Thursday, January 29, 2009
திருமணப் பரிசு
எங்கே திருமணம் என்றாலும்
எப்போது இவள் போனாலும்
தப்பாது சின்ன கடிகாரம்
தகுதிக் கேற்ப இவள் கொடுப்பாள்
இங்கும் வரவேற்பு நடந்தது
இவளுக்கும் தோழியர் பரிசளித்தனர்
இருபது முப்பது கடிகாரங்கள்
இன்னும் பிரிக்க சில உள்ளன
ஏனென்று நாம் நினைக்கும்போது
நீ எதைக் கொடுத்தாய்
அதைப் பெறுவாய்
என்பது இதுவாக இருக்குமோ ?!
நன்கொடை
நல்ல நிகழ்ச்சிக்கு நன்கொடையாம்
பத்தாயிரம் அளிக்க அவன் நினைத்தான்
பத்திரிக்கை வர நாளாயிற்று
பாதி கொடுத்தால் போதுமேன்றான்
இரவும் பகலுமாய் இரண்டுநாளில் அது
இரண்டாயிரம் என்றான் மனைவி மூலம்
வருவதாக தொலைபேசியில் சொன்னார்கள்
இருப்பதைக் கொடுப்போம் வரட்டும் என்றான்
வந்தவர்களை எப்படி சும்மா அனுப்புவது
வந்த செலவுக்கு நூறு முடிவானது
Wednesday, January 28, 2009
Tuesday, January 27, 2009
நிம்மதி
நினைவில் செயலில் தானிருக்கு
மற்றவர் தேவைக் குதவும் போது
மனதில் தோன்றும் நிம்மதி
பெற்றவள் சிரிப்பைக் காணும்போது
பெருகும் அங்கே நிம்மதி
உற்றவள் பிடித்ததை வாங்கும் போது
உனக்கும் அவளுக்கும் நிம்மதி
குற்றம் குறைகளைத் தள்ளும்போது
கூடும் வாழ்வில் நிம்மதி !!
திருந்துங்கள்
நினைத்ததைச் செய்யுங்கள்
செய்வதை முடியுங்கள்
முடிந்ததை த திருத்துங்கள்
திருத்தத்தில் திறுந்துங்கள்!
சக்தி பெறு சக்தி கொடு !
அடங்கிக் கிடக்கும் சக்தியினை
அஷ்டாவதானம் செய்தாவது
ஆர்வமாய் மனிதன் திரட்டுகிறான்
அதற்குப் பெயரே " மின்சக்தி "
அது வந்தாலே இருள் விலகும்
இறை சக்தியை இறஞசிபெறு
இவ்வுலகம் அதனால் உயவடையும் !
Tuesday, January 20, 2009
ஏன மறுக்கிறாய்
பரிசும் விருதும் பாராட்டும்
பார்ப்பவர்க் கெல்லாம் கொடுப்பதில்லை
உரிய தகுதி உடையவர்க்கே
உழைக்கும் கூலி கிடைக்கிறது
மற்றவரைப் பாராட்ட மறுப்பவர்கள்
மனதில் கள்ளம் குடியிருக்கும்
எறறைக்கும் மனதைத் துய்மை யாக்கு
எழில்மிகு வாழ்க்கை வரும் உனக்கு
என்னத்த சாப்பிட்டு என்ன ?
இன்சுலின் போட வேண்டும்
உப்பு அதிகமானால்
உயர் ரத்த அழுத்தமாகும்
புளிப்பு என்றாலோ
பல் முழுதுமே கூசும்
கசப்பு சேர்த்தால்
கழுத்துக்குக் கீழ் போகாது
துவர்ப்பு உண்டால்
தொண்டை அடைக்கும்
காரம் வேண்டினால்
கண்டிப்பாக "அல்சராம்"
என்னத்த சம்பாரித்து
எதைத்தான் சாப்பிடுவியோ!?
Tuesday, January 13, 2009
தூக்கம் வருமா? ஏக்கம் தீருமா?
தன்னை யறியாது தூங்குவது ஏன்
நினைத்துப்பார் உன்மனதில்
நிம்மதி யப்போது நிறைந்திருக்கும்
விலை கொடுத்தாலும் கிடைக்காது
வீண் அரட்டை கை கொடுக்காது
உடலும் மனதும் களைக்கும் வரை
உழைப்பவர் ரகசியம் அறிந்திடுவோம்
திவிர வாதம்
தீவிர வாதம்
அப்பாவி மக்களையே
தப்பாமல் சுட்டுக் கொல்ல
அணிவகுத்து வந்தது யாரு
மதமென்ற பெயராலே
மக்களை அழிககுமந்த
மாபாவிகளுக் கெந்த ஊரு
அண்டை நாடா இருந்தாலே
சண்டை நாடா இருக்குமென்ற
அவசியம் வந்ததென்ன கூறு
ஆதிக்க வெரியரெல்லாம்
அழிந்து பட்ட கதைகளையே
அமைதியாக நினைத்துக் கொஞ்சம் பாரு
வாயுக்கும் வயிற்றுக்கும்
வாதம் செய்யும் இளைஞருக்கு
தீவிர வாதத்தோடு நீ போட்ட சோறு
அமைதி அன்பு நேயத்திலே
ஆடி வரும் கங்கை யாறாம்
மானுடத்தில் நீ கலந்த சேறு
அல்லாவும் ஆண்டவனும்
அருட் தந்தை யேசுவுந்தான்
சேர்ந்து ஒன்றாய் வந்தால் இதுதீருமா
தீரும் வரை காத்திருக்க
தீவிரத்தை தாங்கி நின்று
திகழும் உயிர்கள் இங்கேதான் இருக்குமா /
Monday, January 12, 2009
பொங்கல் வாழ்த்து 2009
கழனியில் கால் வைக்க வேண்டாம்
களத்தில் நெல் அடிக்க வேண்டாம்
கட்டிவெல்லம் வாங்க வேண்டாம்
இட்டமுடன் அரசு தரும் இலவசத்தில்
இனிய பொங்கல் படைப்போம் சரி
நட்டமின்றி நன்றி சொல்வது நாம்
ஆதவனுக்கா? அதன் சின்னத்துக்கா ?
பணம்...குணம்!
பணம்...குணம்!
பணம் காசு படைத்தவனுக்கு
பகல் இரவு தூக்கம் போச்சு
குணம் காத்து நின்றவனுக்கு
குறையில்லா வாழ்க்கை ஆச்சு
ஒன்று இருந்தால் ஒன்று இல்லை
இரண்டும் இருப்பதோ இறைவன் கருணை
நின்று நிதானித்து வாழ்க்கை நடத்து
நிச்சயம் இரண்டிலும் வெற்றி உனக்கு!!
Saturday, January 10, 2009
Tuesday, January 6, 2009
ஆபத்பாந்தவன்
ஆபத்து வந்ததென சொன்னவுடன்
அவநோடி வந்துமே உதவி நின்றான்
காபந்து செய்கின்ற கூட்டத்திலும்
கனிவாகப் பேசியே தனித்து நின்றான்
உயர்ந்த உள்ளதவன் யாரோவென
உதட்டைப் பிதுககினர் உறவினரும்
பிறர் அறியா ரகசியம் அவன் அறிவான்
'புரோநோட்டு காலாவதி ஆகுதென்று'