" அமரன் சிரிப்பே சிரிப்பு " [ 9-5-1982 ]
மலர்கின்ற மலரெல்லாம் மலரேயல்ல
மங்கையவள் பெற்றதுதான் மலரேயாகும்
புலர்கின்ற பொழுதெல்லாம் பொழுதேயல்ல
பூவையவள் கண்டதுதான் பொழுதேயாகும்
வீசிவரும் காற்றெல்லாம் காற்றேயல்ல
கைவீசிவரும் பிள்ளைபட்ட காற்றேகாற்று
பூசுகின்ற அத்தர்மணம் மணமேயல்ல
புகழ்பெற்ற பிள்ளைமேனி ம்ணமேயாகும்
இசைக்கின்ற இசையனைத்தும் இசையேயல்ல
இவள்பிள்ளை இசைப்பதுதான் இசையேயாகும்
பேசுகின்ற பேச்சனைத்தும் பேச்சேயல்ல
பேரனவன் மழலைமட்டும் பேச்சேயாகும்
மயக்குகின்ற மதுவனைத்தும் மதுவேயல்ல
" மது " பிள்ளை தேன்வாய்நீர் மதுவேயாகும்
அயலார்கள் சிரிப்பதெல்லாம் சிரிப்பேயல்ல
அமரன்வாய் சிரிப்பதுதான் சிரிப்பேயாகும் ! !
Saturday, April 25, 2009
Thursday, April 23, 2009
இராமலிங்கம் ! [ 6-5-1982 ]
சேரன் மகளைச் சோழன் மணந்தான்-அந்த
சோழனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான்
வாழவநத திருமகனோ வாய்நிறை சிரிப்பைக் கொண்டான்
தாழவந்த பருந்தின் வேகம் தவழ்வதிலே தானும் கண்டான்
கொட்டிவிட்ட தேளின் வேகம் கொண்டே நகரக்கண்டான்
எட்டிவிட்ட பொருளனைத்தும் எடுத்தெறிந்து உடையக்கண்டான்
தட்டித்தான் கேட்பதற்கு தனக்குநிகர் யார்தான் என்றான்
வெட்டிப்பேச்சு எதற்கு வேகமுள்ள பேரன் என்றேன்
நல்ல அழுகைமூலம் நாபிதன் தேவை சொல்வான்
கள்ள அழுகை காட்டி கனிவுடனே எடுக்கச்செய்வான்
பொல்லா தாமதத்தை பொறுப்பாக்கிப் பாலை மறுப்பான்
மல்லுக்கு நின்றாலும் வாய்வைத்து உறுஞ்சமாட்டான்
பேருக்கு புகழுக்குப் பேரன்தான் பிறந்துவிட்டான்
பேறுபெற்ற பாட்டனின் பெயரையே தானும்கொண்டான்
ஊருக்கு உலகத்துக்கு உயர்வோன்தான் வந்துவிட்டான்
பேரதனைச் சொல்லுகிறேன் பேரன்பெயர்" இராமலிங்கம் "
கணநாதன் அருளாலே களிப்பான வாழ்வு பெறுவான்
குணவதியாம் கலைமகளின் கனிவாலே கல்விபெறுவான்
தனமகளின் பார்வையினை தவறாதுதான் பெறுவான்
எனதான வேல்முருகன் எப்போதும் துணையிருப்பான் ! 
இயற்கையின் படைப்பில் விதிவிலக்காவார்
இருகால் கைகள் இவருக்கில்லை
வயது நாற்பத்தி ஐந்தானாலும்
வளர்ந்தது இரண்டடி மட்டுமேயாகும்
கர்னாடக சங்கீதக் கச்சேரி செய்வார்
கனிவாகப் பல மொழி பேசி எழுதுவார்
இடது கன்னம் தோள் இடையில்பென்சில்
இவர் வைத்து எழுதும் அழகே தனிதான்
குடியரசு தலைவர் முன் கச்சேரி செய்தார்
" குறையொன்றுமில்லை "பாடலைப் பாடினார் !
Tuesday, February 17, 2009
எது ஆன்மீகம் ?
கோயிலுக்கு விளக்கேற்ற
கொண்டு செல்லும் எண்ணை
மீதமிருந்தால் வீட்டுக்கு
எடுத்து வரலமா ?
வரலாம்
வெள்ளிக்கிழமை வீட்டில்
அம்பிகைக்கு விளக்கேற்றலாமா ?
ஏற்றலாம்.
பல் விளக்கினால் பச்சைத் தண்ணியில்
வாய் கொப்பளிக்கலாமா ?
பஜனையில் பாடத்தெரியாதவர்
பாடலாமா ?
ஆடிவெள்ளி அம்பாசமுத்திரத்தில்
குளிக்கலாமா ?
வர வர பொது அறிவே
போய்விட்டது போங்கள் ! !
கோயிலுக்கு விளக்கேற்ற
கொண்டு செல்லும் எண்ணை
மீதமிருந்தால் வீட்டுக்கு
எடுத்து வரலமா ?
வரலாம்
வெள்ளிக்கிழமை வீட்டில்
அம்பிகைக்கு விளக்கேற்றலாமா ?
ஏற்றலாம்.
பல் விளக்கினால் பச்சைத் தண்ணியில்
வாய் கொப்பளிக்கலாமா ?
பஜனையில் பாடத்தெரியாதவர்
பாடலாமா ?
ஆடிவெள்ளி அம்பாசமுத்திரத்தில்
குளிக்கலாமா ?
வர வர பொது அறிவே
போய்விட்டது போங்கள் ! !
Subscribe to:
Posts (Atom)



