Our Chennai Ainuruvars recent visit to Thiruvalangadu
Friday, December 4, 2009
Monday, November 9, 2009
Sunday, October 4, 2009
பாலகாடு விற்றுனியர் கோவில் வரலாறு
அன்புடையீர்
வணக்கம். நம்மவர்களின் குல தெய்வமான பாலகாடு விற்றுனியர் கோவில் வரலாறு பற்றி எனது தந்தையார் எழுதிய புத்தகத்தை இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இத்தருணத்தில் உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன் .இப்புதகத்தினப் படிக்க கீழ்க் கண்ட லிங்க்கினை கிளிக் செய்யவும் .
http://sites.google.com/site/modernsiva/palakkadu-temple-history
சிவப்பிரகாசம்
வணக்கம். நம்மவர்களின் குல தெய்வமான பாலகாடு விற்றுனியர் கோவில் வரலாறு பற்றி எனது தந்தையார் எழுதிய புத்தகத்தை இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இத்தருணத்தில் உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன் .இப்புதகத்தினப் படிக்க கீழ்க் கண்ட லிங்க்கினை கிளிக் செய்யவும் .
http://sites.google.com/site/modernsiva/palakkadu-temple-history
சிவப்பிரகாசம்
Monday, September 28, 2009
நமசிவாயம் வாழ்க
நமசிவாயம் வாழ்க என்றபுத்தகத்தினைப் படிக்க கீழ்க்கண்ட லிங்க்கினை கிளிக் செய்யவும்
http://sites.google.com/site/modernsiva/namasivayam--vaalka
http://sites.google.com/site/modernsiva/namasivayam--vaalka
Friday, September 4, 2009
திருவாசகச் செல்வர்





காலம் சென்ற எங்கள் தந்தை கடந்த ௨000 ஆண்டு நமச்சிவாயம் வாழ்க என்ற நூலினை எழுதினார் .இந்நூல் இலவசமாக வெளியிடப்பட்டது . அனைத்து சிவன் கோவில் களிலும் தரப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை திருக்காரநீஸ்வரர் கோவிலிலும் விநியோகம் செய்யப்பட்டது . இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டம் ஒவ்வொறு துறையிலும் சிறந்த தொண்டினை செய்தவர்களுக்கு அத்தொண்டினைப் பாராட்டி விருது வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . அவ்வகையிலே 2001 ஆம் ஆண்டு ஆன்மீகத்தில் சிறந்து பணியாற்றியதற்கு திருவாசகச் செல்வர் என்ற விருதினை கொடுத்து சிறப்பு செய்தனர். அவ்விழாவின் புகைப்படங்களை மேலே காணலாம் .
இந்த நூலினை அனைவரின் பார்வைக்கும் சமர்ப்பிக்கிறோம் .கீழ்க்கண்ட லிங்கினை டைப் செய்தால் புத்தகத்தினை படிக்கலாம் .இப்புதகத்திணப் படிக்க adobe acrobat reader இருக்க வேண்டும். இல்லையேல் www.adobe.com இணைய தளம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
http://docs.google.com/?tab=3o#owned-by-me
Monday, August 31, 2009
உத்ரகிரியைப் பத்திரிக்கை
உ
சிவ மயம்
உத்ரகிரியைப் பத்திரிக்கை
மறை வு :28.08.09

அன்புடையீர்,
எங்களது தகப்பனார்திருவாசககச்செல்வர் சென்னைK.A. சீனிவாசன் (தாம்பரம் சானடோரியம்)
ஆவணி மாதம் 12 ம் தேதி வெள்ளிக்கிழமை (28.08.09)அன்று காலை 8.00 மணியளவில்
சிவலோகபதவி அடைந்தார்.அன்னாரது உத்ரகிரியைஆவணி மாதம் 22 ம் நாள் 07.09.2009
திங்கள்கிழமை காலை 7.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டைகாரனீஸ்வர ர்கோவில்
குளக்கரையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தாம்பரம் சானடோரியம்
31.08.2009 K.S. முருகேசன்
K.S.சிவப்பிரகாசம்
மதுமதி ரத்தினசபாபதி
Sunday, August 9, 2009
Wednesday, May 6, 2009
கானல் காட்சி!
Saturday, April 25, 2009
அமரன் சிரிப்பே சிரிப்பு !
" அமரன் சிரிப்பே சிரிப்பு " [ 9-5-1982 ]
மலர்கின்ற மலரெல்லாம் மலரேயல்ல
மங்கையவள் பெற்றதுதான் மலரேயாகும்
புலர்கின்ற பொழுதெல்லாம் பொழுதேயல்ல
பூவையவள் கண்டதுதான் பொழுதேயாகும்
வீசிவரும் காற்றெல்லாம் காற்றேயல்ல
கைவீசிவரும் பிள்ளைபட்ட காற்றேகாற்று
பூசுகின்ற அத்தர்மணம் மணமேயல்ல
புகழ்பெற்ற பிள்ளைமேனி ம்ணமேயாகும்
இசைக்கின்ற இசையனைத்தும் இசையேயல்ல
இவள்பிள்ளை இசைப்பதுதான் இசையேயாகும்
பேசுகின்ற பேச்சனைத்தும் பேச்சேயல்ல
பேரனவன் மழலைமட்டும் பேச்சேயாகும்
மயக்குகின்ற மதுவனைத்தும் மதுவேயல்ல
" மது " பிள்ளை தேன்வாய்நீர் மதுவேயாகும்
அயலார்கள் சிரிப்பதெல்லாம் சிரிப்பேயல்ல
அமரன்வாய் சிரிப்பதுதான் சிரிப்பேயாகும் ! !
மலர்கின்ற மலரெல்லாம் மலரேயல்ல
மங்கையவள் பெற்றதுதான் மலரேயாகும்
புலர்கின்ற பொழுதெல்லாம் பொழுதேயல்ல
பூவையவள் கண்டதுதான் பொழுதேயாகும்
வீசிவரும் காற்றெல்லாம் காற்றேயல்ல
கைவீசிவரும் பிள்ளைபட்ட காற்றேகாற்று
பூசுகின்ற அத்தர்மணம் மணமேயல்ல
புகழ்பெற்ற பிள்ளைமேனி ம்ணமேயாகும்
இசைக்கின்ற இசையனைத்தும் இசையேயல்ல
இவள்பிள்ளை இசைப்பதுதான் இசையேயாகும்
பேசுகின்ற பேச்சனைத்தும் பேச்சேயல்ல
பேரனவன் மழலைமட்டும் பேச்சேயாகும்
மயக்குகின்ற மதுவனைத்தும் மதுவேயல்ல
" மது " பிள்ளை தேன்வாய்நீர் மதுவேயாகும்
அயலார்கள் சிரிப்பதெல்லாம் சிரிப்பேயல்ல
அமரன்வாய் சிரிப்பதுதான் சிரிப்பேயாகும் ! !
Thursday, April 23, 2009
இராமலிங்கம் ! [ 6-5-1982 ]
சேரன் மகளைச் சோழன் மணந்தான்-அந்த
சோழனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான்
வாழவநத திருமகனோ வாய்நிறை சிரிப்பைக் கொண்டான்
தாழவந்த பருந்தின் வேகம் தவழ்வதிலே தானும் கண்டான்
கொட்டிவிட்ட தேளின் வேகம் கொண்டே நகரக்கண்டான்
எட்டிவிட்ட பொருளனைத்தும் எடுத்தெறிந்து உடையக்கண்டான்
தட்டித்தான் கேட்பதற்கு தனக்குநிகர் யார்தான் என்றான்
வெட்டிப்பேச்சு எதற்கு வேகமுள்ள பேரன் என்றேன்
நல்ல அழுகைமூலம் நாபிதன் தேவை சொல்வான்
கள்ள அழுகை காட்டி கனிவுடனே எடுக்கச்செய்வான்
பொல்லா தாமதத்தை பொறுப்பாக்கிப் பாலை மறுப்பான்
மல்லுக்கு நின்றாலும் வாய்வைத்து உறுஞ்சமாட்டான்
பேருக்கு புகழுக்குப் பேரன்தான் பிறந்துவிட்டான்
பேறுபெற்ற பாட்டனின் பெயரையே தானும்கொண்டான்
ஊருக்கு உலகத்துக்கு உயர்வோன்தான் வந்துவிட்டான்
பேரதனைச் சொல்லுகிறேன் பேரன்பெயர்" இராமலிங்கம் "
கணநாதன் அருளாலே களிப்பான வாழ்வு பெறுவான்
குணவதியாம் கலைமகளின் கனிவாலே கல்விபெறுவான்
தனமகளின் பார்வையினை தவறாதுதான் பெறுவான்
எனதான வேல்முருகன் எப்போதும் துணையிருப்பான் ! 



